13 September 2019

சொல்லும் மழலையிலே...


வாழ்க வளமுடன் 





போன மாதம் முக நூலில் நடைபெற்ற ஒரு ஓவிய போட்டிக்கான எனது படைப்பு ...

அப்போட்டியில் பாரதியின் கவிதை என்னும் தலைப்பிற்கு இப்படம் வரைந்தேன் ..





கண்ணன் பாட்டு

கண்ணம்மா -- என் குழந்தை


சின்னஞ் சிறுகிளியே, -- கண்ணம்மா!
    செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே -- உலகில்
    ஏற்றம் புரியவந்தாய்!   1


பிள்ளைக் கனியமுதே, -- கண்ணம்மா!
    பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே -- என் முன்னே
    ஆடிவருந் தேனே!    2


ஓடி வருகையிலே, -- கண்ணம்மா!
    உள்ளங் குளிரு தடீ;
ஆடித்திரிதல் கண்டால் -- உன்னைப்போய்
    ஆவி தழுவு தடீ.   3


உச்சி தனை முகந்தால் -- கருவம்
    ஓங்கி வளரு தடீ;
மெச்சி யுனையூரார் -- புகழ்ந்தால்
    மேனி சிலிர்க்கு தடீ.   4


கன்னத்தில் முத்தமிட்டால் -- உள்ளந்தான்
    கள்வெறி கொள்ளு தடீ;
உன்னைத் தழுவிடிலோ, -- கண்ணம்மா!
    உன்மத்த மாகு தடீ.    5


சற்றுன் முகஞ் சிவந்தால் -- மனது
    சஞ்சல மாகு தடீ;
நெற்றி சுருங்கக் கண்டால் -- எனக்கு
    நெஞ்சம் பதைக்கு தடீ   6


உன்கண்ணில் நீர்வழிந்தால் -- என்னெஞ்சில்
    உதிரங் கொட்டு தடீ;
என்கண்ணில் பாவையன்றோ? -- கண்ணம்மா!
    என்னுயிர் நின்ன தன்றோ?   7


சொல்லு மழலையிலே, -- கண்ணம்மா!
    துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே -- எனது
    மூர்க்கந் தவிர்த்திடுவாய்.    8


இன்பக் கதைக ளெல்லாம் -- உன்னைப்போல்
    ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே -- உனைநேர்
    ஆகுமொர் தெய்வ முண்டோ?    9


மார்பில் அணிவதற்கே -- உன்னைப்போல்
    வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -- உன்னைப்போல்
    செல்வம் பிறிது முண்டோ? 10





மேலும் போன வாரம்  செய்த  paper quilling  காதணி கைவண்ணமாக இங்கு  






அன்புடன்
அனுபிரேம் 



4 comments:

  1. ஓவியம் அருமை சகோ
    தங்கம் விலை ஏறி விட்டதால் இனி இப்படித்தான் மக்கள் மாறவேண்டும். உயிருக்கும் உத்திரவாதம் உண்டு.

    ReplyDelete
  2. ஓவியம் அழகு. பேப்பர் க்வில்லிங் தோடு நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. மிகவும் அழகாக இருக்கு ஓவியம். சூப்பர் க்விலிங்க் தோடு செய்திருக்கிறீங்க அனு. வாழ்த்துக்கள். அழகான பூ படம் மேலே.

    ReplyDelete
  4. குழந்தையின் ஓவியம், க்விலிங்க் தோடு எல்லாம் மிக அருமை.

    ReplyDelete