14 March 2023

ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் - பஞ்ச கருட சேவை.

 ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் - மார்ச் 2023

 முந்தைய பதிவு - ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் 

திருக்குறுங்குடி ஸ்ரீ வைஷ்ணவ நம்பி திருக்கல்யாண பிரம்மோற்சவம், 5ம் நாள் இரவு - பஞ்ச கருட சேவை. 

நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, கிடந்த நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பாடு ...

முதல் மூன்று பெருமாள்களும் ஒரே திருக்கோவிலை சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் அருகில் உள்ள திருக்கோயில்களை சேர்ந்தவர்கள் ( முறையே 8 கி.மீ மற்றும் 1 கி.மீ )







5ம் நாள் இரவு - பஞ்ச கருட சேவை.....









கருட சேவை முடிந்தவுடன் ஆஸ்தானம் எழுந்தருளல்  ...









பெரிய திருமொழி 

9 -5. தவள இளம்பிறை 

1790.   


காலையும் மாலை ஒத்துண்டு*  கங்குல் 

நாழிகை ஊழியில் நீண்டு உலாவும்,*

போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும்*  

பொங்கு அழலே ஒக்கும், வாடை சொல்லில்*

மாலவன் மா மணி வண்ணன் மாயம்*  

மற்றும் உள அவை வந்திடா முன்,* 

கோல மயில் பயிலும் புறவின்*  

குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.



1791   

கரு மணி பூண்டு, வெண் நாகு அணைந்து*

  கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும்,*

ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள*

  ஓர் இரவும் உறங்காதிருப்பேன்,*

பெரு மணி வானவர் உச்சி வைத்த*

  பேர் அருளாளன் பெருமை பேசி,* 

குரு மணி நீர் கொழிக்கும் புறவின்*  

குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  




தொடரும் ...

அன்புடன் 
அனுபிரேம் 💕💕💕

1 comment:

  1. படங்கள் அனைத்தும் அழகு. அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

    ReplyDelete