28 September 2024

ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்

 ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோயில்  

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் அமைந்துள்ளது ஸ்ரீமுஷ்ணம். விருத்தாச்சலத்தில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், ஜெயங்கொண்டத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது மனிதர்களால் தோற்றுவிக்கப்படாமல் தானே தோன்றிய மூர்த்திகளில் ஒன்று. இத்தகைய தானே தோன்றிய மூர்த்திகளை “ஸ்வயம் வியக்தம்” என்று வழங்குவார்கள்.



21 September 2024

திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள் கோவில்

சென்னை பல்லாவரதிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில்  உள்ளது. மாமலையாவது திருநீர்மலையே என்று திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற  திருக்கோவில் இது. 

பெருமாளின் 108 திருப்பதிகளுள் 61 வது திவ்ய  தேசம்.


06 September 2024

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்....

 அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...





வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது 
பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், 
பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் 
கிடைக்கும்.