வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள்...
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் இந்த பைக்காரா அணையும் ஒன்று. உதகமண்டலம் அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காரா அருவியாக உருவெடுத்துள்ளது. இந்த பைக்காரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலையின் அருகே பைக்காரா அணை கட்டப்பட்டுள்ளது. மிகவும் ரம்மியமான சுற்றுலாப் படகு நிலையம் இங்கு அமைந்துள்ளது.
நாங்கள் சென்றது கடுமையான கோடையில், அதானல் நீர் வற்றி இருக்கும் அணை. அப்பொழுதும் அங்கு படகு சவாரி இருந்தது ஆனால் நாங்கள் செல்லவில்லை.என்ன இந்த இடத்திற்கு செல்லும் பாதை தான் ... கடவுளே என்னும் வகையில் மிக மோசமாக இருந்தது.
எனது சிறு வயதில் அங்கு சென்ற பொழுது அங்கு முழுவதும் தண்ணீர், அந்த நியாபகங்கள் வந்தன. மீண்டும் ஒரு முறை பனிக்காலத்தில் இங்கு சென்று காண வேண்டும்.
தொடரும்.....
அன்புடன்
அனுபிரேம் 💞💞
அனுபிரேம் 💞💞
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. பைக்காரா அணை பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன். படகு துறைக்கு செல்லும் வழி நன்றாக இல்லையென்பது வருத்தமே..! அதை சீர்படுத்த முயல வேண்டும். ஆனால் படகு சவாரி, ஆறு, மற்றும் இடங்களை நன்றாக படமெடுத்துள்ளீர்கள். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. காணொளியும் கண்டேன்.
பாரதியாரின் பாடல் இனிது. குழந்தைகள் கூடி விளையாடும் "கல்லாங்கா" விளையாடல் சிறுவயதை நினைவு கூர வைத்தது. அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனு, நீங்க எடுத்திருக்கும் படங்கள் ரொம்ப அழகா இருக்கு. நல்லா எடுத்திருக்கீங்க. படகு செல்லும் படங்கள் செம..
ReplyDeleteஆனால், என்னவோ ஒரு சின்ன வருத்தம் தோன்றியது படங்களைப் பார்க்கறப்ப. அதை நீங்களும் குறிப்பிட்டிருக்கீங்க
இன்னும் என்னென்னவோ கட்டுமானப் பணிகள் நடை பெறுகிறதோ? இப்படியான இயற்கை நிறைந்த சுற்றுலா தலங்களை இன்னும் கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் இல்லையா? பச்சை அழிந்து வருவது போன்று ஏதோ பாலைவன அணை போன்று தோற்றம் தருகிறது.
வெயில் நல்லாவே தெரியுது. ஆமா குளிர்காலத்தில் போய்ப் பார்த்து படம் போடுங்க சொல்லுங்க எப்படி இருக்கு என்று.
பாரதியின் பாடலும் குழந்தைகளின் விளையாட்டும் பழைய நினைவுகளை எழுப்பியது.
கீதா