28 October 2017

2௦௦ வது பதிவு...


அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்....


இந்த பதிவு இத்தளத்தின் 2௦௦ வது பதிவு...








எனக்கு   இது   ஒரு  மகிழ்வான தருணமே....ஆம் ...இந்த தளத்தில் எழுத ஆரம்பிக்கும் போது...

என்ன  எழுதுவது///....

எதை பற்றி எழுதுவது////...


அனைத்திற்கும் மேலாக நமக்கு முதலில் எழுத வருமா...


....என  பல பல சந்தேகங்கள்...

..சரி என்ன ஆனாலும் பரவாயில்லை ...


ஒரு முயற்சி செய்வோம்  என்ற ஒரு  ஆர்வத்தில் தான் ஆரம்பித்தேன்...


ஆனால் இன்று திரும்பி பார்க்கும் போது...

மிக மகிழ்ச்சியாகவே உள்ளது...

ஏனெனில்...

எழுதிய எழுத்துக்கள் குறைவாக இருந்தாலும்...

அனைத்தும் சொந்த முயற்சியே...

அதற்கான உழைப்பும் அதிகமே....




ஆம்...

ஒன்றும் தெரியாது...டைப்பிங் உட்பட...

இன்றும் எனது பதிவுகளில்  வாசகங்கள் குறைவாக இருப்பதற்கு காரணமும் அதுவே....

ஆனால் இங்கு பதிவிடுவதற்காக....

படித்த விடயங்ககளும்...செய்திகளும் அதிகமே...

ஏதோ ஒரு வகையில் எனது பொழுதுகள் மிக பயனுள்ளதாக...


யாரோ ஒருவருக்கு உதவுவதாகவுமே உள்ளது என்பதில் பெருமிதமே...



பொதுவாக படம் எடுப்பது பிடிக்கும் என்றாலும்

இங்கு வந்ததால்  ...

அதை பகிர வேண்டும் என்ற ஆசையில் மேலும் தெளிவாக அழகாக எடுக்க ஆரம்பித்தேன்..

அடுத்து...

பல படங்கள் எடுத்து பகிர்வதற்காக ..அதை எடிட் செய்யவும்...

பல படங்களை ஒரே நேரத்தில் சிறிதாக்கவும் ... கணவரின் உதிவியோடு சின்ன கோடிங் கூட செய்தேன்.....(எனக்கு programme ஏதும் தெரியாது...நான் அறிவியல் மாணவி...😏😏😏)







கடைசியாக...

முதல் பதிவில் தொடங்கி கண்டிப்பாக  ஒரு மேற்கோள் கொண்டு பதிவை  முடிக்கும் ஒரு பழக்கம் உள்ளது...

முதலில் இணையத்தில் இருந்தே எடுக்க ஆரம்பித்தேன்....

பின்  பாரதியின் வரிகளை கொண்டு மேற்கோள் இட ஆரம்பித்தேன்...,...

சாதாரண பதிவுகளில் பாரதியின் வரிகளும்....

கோவில் மற்றும் இறைவன் பற்றிய பதிவுகளில் இறை பாடல்களுடனும் நிறைவு செய்கிறேன்...


இதில் பாரதியை படிக்க படிக்க ஆசையே...

உண்மையில் பல முறை பாரதியை படிக்க ஆரம்பித்தும் முழுதும் படிக்க முடிந்தது இல்லை...

ஆனால் இப்பொழுது மிக மகிழ்ச்சி...


ஆம்..படங்களுடன் பாரதியின் வரிகளின் படங்கள் இதுவரை 75 மேல் வந்துவிட்டது....





இத்தகைய அளவிடா இயலா மகிழ்ச்சிக்கும்...பதிவுக்கும்...


நட்பூகளாகிய நீங்களே காரணம்....



ஆம்...


ஒவ்வொரு பதிவிற்கும்...


உங்கள்  அனைவரின் ...


ஊக்கமும்....


மகிழ்ச்சியான  கருத்துரையுமே...




மேன்மேலும் எழுதவும் //.....பதிவிடவும்....

தூண்டுகிறது....

அதனால் ...


அனைவருக்கும் எனது மனமார்ந்த ...


நன்றி ..


நன்றி...


நன்றி....


மேலும்   பல பல  நன்றிகள்...






(அனைவரும் 5௦௦, 1௦௦௦ என சென்று கொண்டிருக்கும் நிலையில் இது குறைவு தான்....இருப்பினும் ....நன்றி கூறுவது முக்கியம் அன்றோ...)





அன்புடன்

அனுபிரேம்......

















13 comments:

  1. அருமையான புகைப்படங்களுடன் 200-வது ஸூப்பர் விரைவில் 500-ஐ தொட வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தரமான பதிவுகளை தொடர்ந்து தரும் உங்களுக்கு பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மேலும் பற்பல பதிவுகளைத் தந்திடவேண்டும்..
    நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. உங்களுடைய 200 ஆவது பதிவிற்கு வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் அனு. மென்மேலும் பதிவுகள் எழுதிடவேண்டுமென வாழ்த்துகிறேன்.
    உங்கள் பதிவுகளில் கோவில்கள் பற்றியும், தெரியாத தகவல்களை அறிந்து கொண்டோம். அழகான படங்களும் கூடவே.
    எனக்கும் நீங்கள் இறுதியில் தரும் மேற்கோள் பிடித்தமானதே.
    நன்றி அனு.

    ReplyDelete
  6. வாழ்த்துகள்! தொடருங்கள்!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் அனு :)

    ReplyDelete
  8. 200-வது பதிவு... வாவ்! மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் பதிவுகள் தொடரட்டும்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் சகோதரி
    தங்களின் வலைப் பயணம் தொடரட்டும்

    ReplyDelete