வாழ்க வளமுடன்
முந்தைய பதிவு ஆதிப்ரமோத்ஸவம் - கருட சேவை, ஸ்ரீரங்கம்
ஆதிப்ரமோத்ஸவம் - நெல் அளவை, ஸ்ரீரங்கம்
ஆதிப்ரமோத்சவம் ஒன்பதாம் நாள்
தாயார் பெருமாள் சேர்த்தி நாள், மட்டை அடி உற்சவமும் , தாயார் சன்னதி வெளி வாயில் சமாதானமும்..
நம்பெருமாள் ரெங்கநாயகி தாயார் சேர்த்தி திருமஞ்சனம்
![]() |
![]() |
![]() |
திருவாய்மொழி - ஏழாம் பத்து
இரண்டாம் திருவாய்மொழி – கங்குலும்பகலும்
3352
சிந்திக்கும் திசைக்கும் தேறும்கை கூப்பும்
திருவரங்கத்துள்ளாய்! என்னும் வந்திக்கும் *
ஆங்கே மழைக் கண்ணீர் மல்க
வந்திடாயென்றென்றே மயங்கும் *
அந்திப் போது அவுணன் உடலிடந்தானே!
அலைகடல் கடைந்த ஆரமுதே *
சந்தித்து உன்சரணம் சார்வதேவலித்த
தையலை மையல் செய்தானே!
5
3353
மையல் செய்தென்னை மனம்கவர்ந்தானே!
என்னும் மாமாயனே! என்னும் *
செய்யவாய் மணியே! என்னும் தண்புனல்சூழ்
திருவரங்கத்துள்ளாய்! என்னும் *
வெய்யவாள் தண்டு சங்கு சக்கரம் வில்லேந்தும்
விண்ணோர்முதல்! என்னும் *
பைகொள் பாம்பணையாய்! இவள்திறத்தருளாய்
பாவியேன் செயற்பாலதுவே.
- 6
3356
என்திருமகள் சேர்மார்வனே! என்னும்
என்னுடையாவியே! என்னும் *
நின்திரு வெயிற்றாலிடந்து நீகொண்ட
நிலமகள் கேள்வனே! என்னும் *
அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகளன்பனே! என்னும் *
தென்திருவரங்கம் கோயில் கொண்டானே!
தெளிகிலேன் முடிவிவள் தனக்கே. (2)
9
ஆதிப்ரமோத்ஸவம் படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...
இவ்வழகிய படங்களை வழங்கியவர்களும் , கண்டு மகிழ்ந்த அனைவருக்கும் நன்றிகள் பல ...
ஸ்ரீ நம்பெருமாள் திருவடிகளே சரணம் ...
அன்புடன்
அனுபிரேம்
ஸ்ரீரங்க தரிசனம் இனிமை...
ReplyDeleteஸ்ரீ ரங்கநாதன் திருவடிகள் போற்றி.. போற்றி..
super
ReplyDeleteஅழகான படங்கள். உங்கள் பதிவு மூலம் திருவரங்கம் சென்று வந்தேன்! :) நன்றி.
ReplyDelete