25 August 2025

12.ஊட்டி டீ பேக்டரி

வாழ்க வளமுடன் 

 



முந்தைய பதிவுகள்...  



12.ஊட்டி டீ பேக்டரி 


1839 மீட்டர் உயரத்தில் தொட்டபெட்டா சாலையில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தேயிலை தொழிற்சாலையானது, தேயிலை இலைகளை பறிப்பது முதல் முழு பண்டமாக மாறுவது  வரை தேயிலை தயாரிக்கும் செயல்முறையை நமக்கு  அறிமுகப்படுத்துகிறது.

 இந்த தொழிற்சாலையைப் பார்வையிடுவதன் மூலம், இந்தியாவின் தேயிலையின் வரலாறு மற்றும் நீலகிரி மலைகளில் அதன் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம்  அறிந்து கொள்ளலாம்.  

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான தேயிலை இலைகளின் தோற்றம் பற்றியும் இது நமக்குச் சொல்லும். 

இந்த  தொழிற்சாலைக்குள் ஒரு தேயிலை அருங்காட்சியகமும் உள்ளது, இது இயந்திரங்களைப் பயன்படுத்தி தேயிலை இலைகளை வெட்டுதல், முறுக்குதல் மற்றும் சுருட்டுதல் (CTC) முறைகளைப் பற்றி நமக்கு விளக்குகிறது.

தேயிலை உற்பத்தியின் ஒவ்வொரு கட்டமும் வாடுதல், உருட்டுதல், உலர்த்துதல் மற்றும் இறுதியாக,  இந்த தேயிலையின் நிலைகளின் மாறுதல் அனைத்தும் பார்வையாளர்களுக்கு காணொளி உதவியுடன் காட்டப்படுகின்றன.  தேயிலை இலைகள் துருப்பிடிக்காத எஃகு கொள்கலனில் உலர்த்தப்பட்டு, CTC வழியாக செல்லும் முன் நொறுக்கிகள் வழியாக அனுப்பப்படுகின்றன.







நாம்  ஒரு தேநீர் பிரியர் எனில்  இந்த ஆலை  நம் மனதை கவரும். எனக்கு டீ குடிப்பது என்பது அமிர்தம் போல மிக பிடிக்கும். தினமும் நான்  குடிக்கும் டீயை  தினமும் புதிதாய் எண்ணி ரசித்து குடிக்கும் எனக்கு இந்த இடம் மிக அழகாகப்பட்டது. மிக அருமையான தகவல்களுடன்  சுத்தமாக தேனீர் தூள் தயாரிப்பு இங்கு நடைபெறுகிறது.   






















தொடரும்..... 

அன்புடன் 
அனுபிரேம் 💞💞



6 comments:

  1. சிறப்பு. நாங்கள் கோத்தகிரி அருகே உள்ள ஒரு தேநீர் factory சென்று பார்த்தோம் எங்களது சமீப பயணத்தில்.....

    ReplyDelete
  2. நான் இதுபோன்ற இடங்களுக்குச் சென்றதில்லை.  எனக்கு தேநீரைவிட காஃபிதான் இஷ்டம்.  வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பின்தான் எனக்கு தேனீரே அறிமுகம்.  பதிவு சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. மிக மகிழ்ச்சி சார்

      Delete
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தேனீர் தூளின் தயாரிப்பு எப்படியென்ற தொழிற்சாலையை பற்றிய விபரங்களை படித்து அறிந்து கொண்டேன். நன்றாக படங்களுடன் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கமலா அக்கா

      Delete