20 June 2020

ஸ்ரீ கள்ளழகர் திருவிழா - கள்ளர் திருக்கோலம்

ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் திருவிழா



3ம் நாள் - அழகர் மலையில் இருந்து புறப்பாடு....


கள்ளர் திருக்கோலமாய் கண்டாங்கி பட்டு உடுத்தி, அழகர் மலையிலிருந்து சுவாமி கள்ளழகர் , 
கள்ளர் கொண்டை,  
கொண்டையில் குத்தீட்டி,  
கையில் வலைதடி (பூமராங்) , 
இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் ...... 































அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வரும் கள்ளழகர் வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்குவார் . 




திருக்கோவிலில் நடைபெற்ற  இந்த வருட விழா காட்சிகள் ...








திருவாய்மொழி
மூன்றாம் பத்து
ஒன்றாம் திருவாய்மொழி – முடிச்சோதி
திருமாலிருஞ்சோலை அழகரது எழிலை அநுபவித்தல்


2899

பரஞ்சோதிநீபரமாய் நின்னிகழ்ந்துபின் * மற்றோர் 
பரஞ்சோதியின்மையின் படியோவிநிகழ்கின்ற * 
பரஞ்சோதிநின்னுள்ளே படருலகம்படைத்த * எம் 
பரஞ்சோதி! கோவிந்தா! பண்புரைக்கமாட்டேனே.  3




2900

மாட்டாதேயாகிலும் இம்மலர்தலைமாஞாலம் * நின் 
மாட்டாயமலர்புரையும் திருவுருவும்மனம்வைக்க * 
மாட்டாதபலசமய மதிகொடுத்தாய் * மலர்த்துழாய் 
மாட்டேநீமனம் வைத்தாய் மாஞாலம்வருந்தாதே.  4






மதுரை சித்திரைத்  திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம்





1 comment: