மார்கழித் திங்கள் நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்
கலியுகத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன் என லட்சிய சபதம் கொண்டாள்.
கிருஷ்ணாவதார காலத்தில், ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை மேற்கொண்டாள்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த பெருமாளின் சன்னதிக்குச் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என முடியும் முப்பது பாடல்கள் பாடினாள்.
அதுவே திருப்பாவை ஆயிற்று.
திரு என்றால் மரியாதைக்குரிய எனப் பொருள். பாவை என்றால் பெண்.
நமது வணக்கத்துக்குரிய பெண் தெய்வமாகிய ஆண்டாள் பாடியதால் இது திருப்பாவை ஆயிற்று.
முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது.
இரண்டு முதல் ஐந்து பாடல்கள் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் சிறப்புகளைச் சொல்கிறது.
ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாகக் கற்பனை செய்து அவர்களை எழுப்பிக்கொண்டு கோயிலுக்குச் செல்வதை எடுத்துச் சொல்கிறது.
இந்தப் பாடல்களில் மார்கழி மாதத்தில் காலை நேரப் பணிகள் அக்காலத்தில் எப்படி இருந்தன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
கடைசி 15 பாடல்கள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு பெருமாளைக் வேண்டும் ஆண்டாளின் பக்தியை எடுத்துச் சொல்கிறது.
![]() |
ஸ்ரீரங்கம் - ஸ்ரீரெங்கநாயகி தாயார் |
அன்புடன்
அனுபிரேம்
மார்கஈ நீராடல் வாழ்க..
ReplyDeleteமங்கலகரமான பதிவு...
திருப்பாவையைப்பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்! இனிய பதிவு!!
ReplyDeleteஅருமை... ஆண்டாளின் தெய்வீக அழகு ததும்பும் படங்கள்.
ReplyDeleteசென்ற வருடத்தில் ஆண்டாளை தரிசித்தது நினைவுக்கு வருகிறது.
நமக்கே பறை தருவான் - இதற்கு 'நமக்கு வேண்டிய யாவையும் தருவான்' என்று பொருள் சொல்லியிருக்கீங்க.
அழகான படங்கள்.
ReplyDeleteமார்கழி சிறப்புப் பதிவுகள் தொடரட்டும்.