10 January 2021

தொண்டரடிப்பொடியாழ்வார்

  தொண்டரடிப் பொடியாழ்வார்   அவதார திருநட்சித்திரம் இன்று - மார்கழியில் கேட்டை




தொண்டரடி பொடியாழ்வார்  வாழி திருநாமம்!

மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே..!




பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)

பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்

நட்சத்திரம் : கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி திதி)

கிழமை : செவ்வாய்

எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி

பாடிய பாடல் : 55

வேறு பெயர் : விப்பிர நாராயணர்

சிறப்பு : திருமாலின் வனமாலையின் அம்சம்



விப்ரநாராயணர் என்ற தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய பாசுரங்கள் திருமாலை என்ற 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி என்ற 10 பாசுரங்களும் ஆக, 55 பாசுரங்கள்.

 திருவரங்கத்து பெரிய பெருமாளுக்கு ஆட்பட்டு வாழ்ந்த இவர் தேவதேவி என்ற பெண்ணின் அழகில் மயங்கிச் சில நாள் நிலைதவறி மீண்டும் பெருமானின் திருவருளால் பாகவத கைங்கரியத்தில் ஈடுபட்டு பரமனடி சேர்ந்தவர்.





பாயுநீரரங்கந்தன்னுள் பாம்பணைப்பள்ளிகொண்ட * 

மாயனார்திருநன்மார்பும் மரகதவுருவும்தோளும் * 

தூய தாமரைக்கண்களும் துவரிதழ்பவளவாயும் * 

ஆயசீர்முடியும்தேசும் அடியரோர்க்ககலலாமே?

20 891



பணிவினால்மனமதொன்றிப் பவளவாயரங்கனார்க்கு * 

துணிவினால்வாழமாட்டாத் தொல்லைநெஞ்சே! நீ சொல்லாய் * 

அணியனார்செம்பொனாய அருவரையனையகோயில் * 

மணியனார்கிடந்தவாற்றை மனத்தினால்நினைக்கலாமே?

21 892




பேசிற்றேபேசலல்லால் பெருமையொன்றுணரலாகாது * 

ஆசற்றார் தங்கட்கல்லால் அறியலாவானுமல்லன் * 

மாசற்றார்மனத்துளானை வணங்கிநாமிருப்பதல்லால் * 

பேசத்தானாவதுண்டோ? பேதைநெஞ்சே! நீ சொல்லாய்.


22 893


கங்கயிற்புனிதமாய காவிரிநடுவுபாட்டு * 

பொங்கு நீர்பரந்துபாயும் பூம்பொழிலரங்கந்தன்னுள் * 

எங்கள் மாலிறைவனீசன் கிடந்ததோர்கிடக்கைகண்டும் * 

எங்ஙனம்மறந்துவாழ்கேன்? ஏழையேனேழையேனே. 


23 894






வெள்ளநீர்பரந்துபாயும் விரிபொழிலரங்கந்தன்னுள் * 

கள்வனார்கிடந்தவாறும் கமலநன்முகமும்கண்டும் *

உள்ளமே! வலியைபோலும் ஒருவனென்றுணரமாட்டாய் * 

கள்ளமேகாதல்செய்து உன்கள்ளத்தேகழிக்கின் றாயே.


24 895


குளித்துமூன் றனலையோம்பும் குறிகொளந்தணமைதன்னை * 

ஒளித்திட்டேன், என்கணில்லை நின்கணும்பத்தனல்லேன் * 

களிப்பதென்கொண்டு? நம்பீ! கடல்வண்ணா! கதறுகின்றேன் * 

அளித்தெனக்கருள்செய்கண்டாய் அரங்கமாநகருளானே! 


25 896









போதெல்லாம்போதுகொண்டு உன்பொன்னடி புனையமாட்டேன் * 

தீதிலாமொழிகள் கொண்டு உன்திருக்குணம்செப்பமாட்டேன் * 

காதலால்நெஞ்சமன்பு கலந்திலேன், அதுதன்னாலே * 

ஏதிலேனரங்கர்க்குஎல்லே! என்செய்வான் தோன்றினேனே.

26 897


குரங்குகள்மலையைநூக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டோ டி * 

தரங்கநீரடைக்க லுற்ற சலமிலாவணிலும்போலேன் * 

மரங்கள்போல்வலியநெஞ்சம் வஞ்சனேன், நெஞ்சுதன்னால் * 

அரங்கனார்க்காட்செய்யாதே அளியத்தேனயர்க்கின்றேனே.

27 898









உம்பராலறியலாகா ஒளியுளார், ஆனைக்காகி * 

செம்புலாலுண்டுவாழும் முதலைமேல்சீறிவந்தார் * 

நம்பரமாயதுண்டே? நாய்களோம் சிறுமையோரா * 

எம்பிராற்காட்செய்யாதே என்செய்வான் தோன்றினேனே?

28 899

ஊரிலேன்காணியில்லை உறவுமற்றொருவரில்லை * 

பாரில்நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி! * 

காரொளிவண்ணனே! கண்ணனே! கதறுகின்றேன் * 

ஆருளர்? களைகணம்மா! அரங்கமாநகருளானே!

29 900









ஓம் நமோ நாராயணாய நம!!
தொண்டரடிப் பொடியாழ்வார்  திருவடிகளே சரணம்!!




 அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. ஆழ்வார் பற்றிய தகவல்கள், படங்கள் மற்றும் அவரது பாசுரங்கள் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete