31 August 2017

உயிரோவியம் உனக்காகத்தான்.. - ஹமீதா

வணக்கம் நட்புகளே...

வாழ்க நலம்....



இன்றைய புத்தக அலமாரியில் அடுக்கும் நூல்...

உயிரோவியம் உனக்காகத்தான்......இதன் ஆசிரியர் ஹமீதா....            அவரின் தளம்...

பொதுவாக இங்கு நான் பகிர்வது நூல் விமர்சனம் இல்லை...எனது வாசிப்பின் அனுபவம் என்பது உங்களுக்கு தெரியும்....

இந்த நூலின் வாசிப்பு அனுபவம் என்பது....

கண்ணில் கண்ணீர் கர கர வென்று ..வழிய வழிய படித்த நாவல்....


ஆம்...

கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை...சரி இத்தனை உணர்வு பூர்வமாக படிக்காமல் பிறகு படிக்கலாம் என்ற எண்ணமும் வரவில்லை...

கண்ணீர் ஒருபுறம்...நாவல் ஒருபுறம் என்று மிக வேகமாக படித்த ஒரு மனத்திற்கு பிடித்த நாவல்...

சில நாட்களாக படித்த நாவல்கள் எதுவும் மனத்தில் பதியாமல் சென்றது..... ...

திடீரென்று உயிரோவியம் உனக்காகத்தான் நாவல் கிடைக்க பெரும்  எதிர்ப்பார்ப்பு  எதுவும்   இல்லாமல்  தான் படிக்க ஆரம்பித்தேன்...





27 August 2017

புளி மிளகாய்...

வாழ்க  நலம்..


புளி மிளகாய்....

இதுவரை இந்த உணவை பார்த்ததும் இல்லை...உண்டதும் இல்லை....

வழக்கம் போல் எங்கள் ப்ளாக் வாசிக்கும் போது தெரிந்து கொண்டேன்...அம்மா இந்த    முறை ஊருக்கு வந்த போது இதை பற்றிய பேச்சு வந்தது  ...

அப்போ அம்மா  ... ..முன்னேல்லாம்  செஞ்சது உண்டு....அப்புறம்  நீங்க எல்லாம் சாப்பிடறது இல்ல ...அதனாலே  செய்றதும்     இல்ல..னு... சொன்னாங்க..



சரி மா வாங்க ..இப்ப செய்யலாம் னு சொல்லி ... வீட்ல இருந்த மோர் மிளகாய் வச்சு....   அம்மா சமைக்க ..நான் படம் எடுத்தேன்...

நல்ல காரமா உறுகாய்க்கு தம்பி மாதரி இருந்துச்சு...





24 August 2017

பிள்ளையாரப்பா...

வாழ்க நலம்....



பிள்ளையாரப்பா....சமீபத்தில் கீதாக்கா பிள்ளையார் பத்தி ஒரு கதை எழுதி இருந்தாங்க  வெற்றிப் பிள்ளையார் ....அது ஒரு அழகான குட்டி கதை..ஆன அதைப்பத்தி சொல்றதவிட ...அக்கதைக்கு வந்த பின்னூட்டங்கள்...சொல்லியது என்னன்னா...



எல்லாருக்கும் ஒரு குட்டி...பிள்ளையார் நண்பராக இருக்கார்.....

அவங்க அவங்க மனசுக்குள்ள அவர்ட்ட பேசுறாங்க...டீல் போட்றாங்க...பெட் கட்ராங்க... சுக துக்கங்களை பகிர்ந்துக்கிராங்க...


ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது....


அப்படி நண்பரா இருக்க நம்ம பிள்ளையாருக்கு .....பிறந்தநாள்....


அதனால ...அனைவருக்கும்  எங்களது பிள்ளையார் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்...


எங்க வீட்ல பிள்ளையார் பொம்மை எல்லாம் வாங்கி சாமி கும்பிட மாட்டோம்...கொழுக்கட்டை செஞ்சு...மஞ்சள் பிள்ளையார் பிடித்து அருகம்புல் வைத்து படைப்பதோடு சரி....


விநாயகர்  சதுர்த்தி தின வாழ்த்துக்கள் சில பாடல்களுடன்....





20 August 2017

கண்ணுக்கு விருந்தாக...

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்...


நேற்று ஆகஸ்ட் 19 உலக புகைப்பட தினம்....

புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. 

அதிலும், நேற்று  175-வது ஆண்டு புகைப்பட தினமாகும். 





18 August 2017

பொன்னாங்கண்ணி கீரை..


பொன்னாங்கண்ணி கீரை......

சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.

இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து,  கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை.


பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும்.

 இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

மேனியை பளபளக்கச் செய்யும்.

நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.


கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படுவது பொன்னாங்கண்ணி கீரை....





15 August 2017

நாட்டு வணக்கம்....




நாட்டு வணக்கம்....

பாரதியின் வரிகளில்....



எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 
      இருந்ததும் இந்நாடே-அதன் 
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 
      முடிந்ததும் இந்நாடே-அவர் 
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து 
      சிறந்ததும் இந்நாடே-இதை 
வந்தனை கூறி மனதில் இருத்தி, என் 
      வாயுற வாழ்த்தேனோ-இதை 
'வந்தே மாதரம், வந்தே மாதரம்' 
      என்று வணங்கேனோ?


14 August 2017

ஆடி 28 நம்பெருமாள் ..காவேரி தாயாருக்கு சீர்வரிசை வைபவம்...



ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில்..


நேற்று (13.8.2017 ) நம்பெருமாள் ஸ்ரீரங்கம் காவேரி கரை அம்மாமண்டபத்தில்... காலை எழுந்தருளி.... மாலையில் காவேரித்தாயருக்கு  பட்டு புடவை, மாலைகள் மற்றும் சிறிய உணவு மூட்டை போன்ற  மங்களப் பொருட்களை சீர்வரிசையாக வழங்கினார் ..