09 January 2018

திருப்பாவை 25














தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே!
அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன்
உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான்.

அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய    திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம்.

அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.


ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....








அன்புடன்
அனுபிரேம்

5 comments: