10 July 2018

விவேகானந்தர் பாறை

வாழ்க நலம்


மாத்தூர் தொட்டிப் பாலம் பார்த்துவிட்டு...அடுத்தநாள் நாங்கள் காண  சென்றது


விவேகானந்தர் பாறை


 சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். எனவே அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது.









நாங்கள் சென்ற படகு...






 விவேகானந்தர் பாறையின் முகப்பு..







நல்ல பராமரிப்பு அனைத்து இடத்திலும்...





இம்மண்டபத்தினுள் விவேகானந்தர் நின்ற நிலையிலான பெரிய வெண்கலைச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.


விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ள பாறையின் கீழ் பகுதியில் தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

அங்கு அமர்ந்து யார் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.




நினைவு மண்டபம்


ஸ்ரீ பாத மண்டபம்


  ஸ்ரீ பகவதியம்மன், சிவபெருமானை மணப்பதற்காக இந்தப் பாறையில் நின்று தவம் செய்தததால் ..இந்தப் பாறையில் அவரது பாதத்தின் தடம் பதிந்துள்ளது..அதனால்  இந்தப் பாறைக்கு ஸ்ரீ பாதப் பாறை என்று தான் பெயர் இருந்தது.

ஆனால் இப்பொழுது   விவேகானந்தர் பாறை என அழைக்கப் படுகிறது.


 அம்மன் பாதம் உள்ள  இடம், கண்ணாடியில் பார்வைக்குத் தெரியும்படி பாதுகாக்கப்படுகிறது. இந்தப் பாதத்தைச் சுற்றிக் கோயில் போன்ற அமைப்பில் திருபாத மண்டபம் எனும் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது அமைதி தவழும் இடம்...


ஸ்ரீ பாத மண்டபம்




 சூரிய கடிகாரம்..
























பரவசமான பயணம் இது...ஒவ்வொரு இடத்திலும் நின்று, நிதானமாக ரசித்தோம்...








11.திற்பரப்பு நீர்வீழ்ச்சி

12.கரையோரம்..

13. திற்பரப்பு நீர்வீழ்ச்சி  படகுத்துறை...

14.மாத்தூர் தொட்டிப் பாலம் 1

15. மாத்தூர் தொட்டிப் பாலம் 2

தொடரும்...



அன்புடன்
அனுபிரேம்...



5 comments:

  1. விவேகானந்தர் பாறைக்கு போய் கிட்டத்தட்ட 8 வருசமாச்சுது அனு.

    ReplyDelete
  2. நாங்களும் அங்கு வந்தது போல ஒரு உணர்வு. படங்கள் அந்த உணர்வைத் தந்தன.

    ReplyDelete
  3. நாங்க்கள் பார்த்த நினைவு வந்தது. நானும் பதிவு போட்டு இருக்கிறேன்.
    பாரதி பாடல் படித்தேன்.

    ReplyDelete
  4. இந்த இடத்தை இப்போதுதான் அறிகிறேன்.. மிக அருமையாகக் கட்டப்பட்டிருக்கு.

    ReplyDelete
  5. துளசி : மிக மிக அழகான படங்கள். சென்ற நினைவுகள் வந்தன...

    கீதா: அனு பழைய நினைவுகள் வந்துவிட்டன. அங்கு பாறையில் ஒர் இடத்தில் கொஞ்சம் இறங்கினால் தண்ணீர் வந்து அடிக்கும் நம் மேல் தெறிக்கும் அந்த இடம் எனக்கு மிகவும் பிடிக்கும். அது இப்போதும் அனுமதிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. இங்கு 6 வது படம் அந்த இடம் என்றுதான் நினைவு....படம் எல்லாம் சூப்பர்...அனு

    ReplyDelete