வாழ்க வளமுடன்
குமரியம்மன் திருக்கோவிலில் தரிசனம் செய்த பின்..கன்னியாகுமரியில் இருந்து கிளம்பிவிட்டோம்...
அடுத்து நாங்கள் சென்றது நாகர்கோவிலுக்கு அங்கிருந்து தான் இரவு ரயில் எங்களுக்கு ...
இன்னும் மதியம் முழுவதும் இருப்பதால் அங்கு விசாரித்து அடுத்து சென்ற இடம் நாகராஜா கோவில்.
நாங்கள் சென்றது மதியம் 12.30 .
அங்கு சென்று பார்த்தால் நடை சாத்திருந்தது. மாலை 5 மணிக்கு தான் மீண்டும் நடை திறப்பு...
அங்கு அமரவும் இடம் இல்லை ....அதனால் சிறிது நேரம் ஓய்வுக்கு பின்... சரி அடுத்த தளத்தை காணலாம் என்று அடுத்த இடத்தை நோக்கி சென்றோம் ஆட்டோ வில் ...
அது எங்கே அடுத்த பதிவில்...
11.திற்பரப்பு நீர்வீழ்ச்சி
12.கரையோரம்..
13. திற்பரப்பு நீர்வீழ்ச்சி படகுத்துறை...
14.மாத்தூர் தொட்டிப் பாலம் 1
15. மாத்தூர் தொட்டிப் பாலம் 2
16. விவேகானந்தர் பாறை
17.திருவள்ளுவர் சிலை
18. அருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்
தொடரும்...
அன்புடன்
அனுபிரேம்...
சுற்றுலா என்றாலே மனதுக்கும் கண்ணுக்கும் அழகுதான்.
ReplyDeleteசின்னஞ்சிறுகிளியே.. எனக்கும் பிடித்த பாடல் அழகு..
ஆமா அதிரா ..இதம் தரும் பாடல்
Deleteநான் போகனும்ன்னு ஆசைப்படும் கோவிலும், ஊரும்.. எனக்கு எப்போ வாய்க்கும்ன்னு தெரிலப்பா
ReplyDeleteவிரைவில் அமையும் ராஜி க்கா
Deleteநாகராஜா கோவில் - அடடா மூடி இருந்ததா....
ReplyDeleteஅடுத்தது எங்கே.... எனத் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
இதோ நாளை பதிவில்
Deleteஅருமை
ReplyDeleteநன்றி சகோ
Deleteஆஹா எங்கூருக்கு திருவண்பரிசாரத்துக்கு வந்துட்டீங்களா அனு!!! சூப்பர்!! எங்க ஊர்க் குளத்தைக் கண்டதும் பழைய நினைவுகள் வருது. பாவாடையை பலூன் போல் செய்து கொண்டு மிதந்து சென்றது, நடுக்குளம் வரை நீந்த வேண்டும் என்று போட்டியில் நீந்தியது எல்லாம் நினைவுக்கு வருது அனு. மிக்க மிக்க நன்றி. நீங்கள் இங்கு கொடுத்திருக்கும் படத்தில் இருக்கும் இடம் ஆணகள் குளிக்கும் இடம்...அந்தக் கத்வு இருக்கும் இடம் ஸ்வாமியின் இடம்!.
ReplyDeleteபெண்கள் படித்துறை இதற்கு நேர் எதிரில் இடப்புறம் மற்றும் வலப்புறம் இருக்கும் தேரடியில்....
எங்கள் ஊர் போகப் போகிறீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் ஏற்பாடுகள் செய்திருப்பேன் அனு....அடுத்த முறை சென்றீர்கள் என்றால் சொல்லுங்கள்.
காத்திருக்கிறேன் எங்கள் ஊரைக் கண்ணாரக் காண!!
கீதா
ரொம்ப மகிழ்ச்சி கீதாக்கா ...அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பா சொல்றேன்..
Deleteமுதல் படம் மிகவும் அழகு. அருமையான பாரதி பாடல்.
ReplyDeleteநன்றி பா
Delete