14 April 2020

சமயபுரம் சித்திரை தேர்...

வாழ்க வளமுடன் ...



சித்திரை மாதம் பிறந்து வரும் முதல் செவ்வாய்க் கிழமையன்று சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இவ்வருடம் தேர் திருவிழா நடைபெறவில்லை ஆயினும் முந்தைய வருட படங்களை கண்டு அம்மனை தரிசிப்போம் ....














ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்க
எண்ணி வந்தவரம் கொடுக்க வாருமம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா - இங்கு
உன்னை அன்றி வேறு கதி ஏதம்மா


சமயபுரம் சன்னதியின் வாசலிலே
லோக சங்கரியே உருகி நின்றோம் பூஜையிலே
கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய்
நாங்க கொண்டாட வந்ததற்கும் பலன் கொடுப்பாய்


வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம் நலம் தருவாய்
சிங்க வாகனத்தில் சக்தியாக வலம் வருவாய்
ஊர் வாழ அருள் வடிவெடுப்பாய் - இந்த
உலகத்துக்கே உன் அருளால் குடைபிடிப்பாய்.

தாயே சமயபுரத்தாளே
எல்லாம் உன் அடிமையே
எல்லாம் உன் உடமையே
எல்லாம் உன் செயலே

ஓம் சக்தி பராசக்தி !!!!


அடுத்த வருட தேர் திருவிழாவை நேரில் காண அம்மன் அருள் புரிய வேணும் ...

அன்புடன்
அனுபிரேம் 

3 comments:

  1. தேர் திருவிழா காட்சிகள் நன்று. அடுத்த வருடம் தேர் திருவிழா காண அம்மன் அருள் புரியட்டும்.

    ReplyDelete
  2. எல்லா விஷயத்திலும் இந்த ஏக்கம் பொதுவாகி விட்டது!

    ReplyDelete
  3. போன வருட தேர்திருவிழா படங்கள் எல்லாம் அழகு.
    அடுத்த வருடம் தேர்திருவிழா நடக்க அம்மன் கருணை புரியவேண்டும்.

    ReplyDelete