04 January 2022

இருபதாம் பாசுரம் - முப்பத்து மூவர்

 இருபதாம் பாசுரம்- இதில் கண்ணனையும் நப்பின்னைப் பிராட்டியையும் சேர்த்து எழுப்பி நப்பின்னைப் பிராட்டியிடம் “நீ எங்களையும் அவனையும் நன்றாகச் சேர்த்து, அனுபவிக்கும்படி செய்” என்று கேட்கிறாள்.





முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

      கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்

செப்பம் உடையாய்! திறல் உடையாய்!  செற்றார்க்கு

      வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்

செப்பு அன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

      நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை

      இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய்


முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு இடர்வரும் முன்னமே எழுந்தருளி அவர்களுடைய நடுக்கத்தைப் போக்கவல்ல பலத்தையுடைய கண்ணன் எம்பெருமானே! துயில் எழு. 

அடியார்களை ரக்ஷிப்பதில் நேர்மை உள்ளவனே! 

ரக்ஷிப்பதற்குத் தேவையான பலம் உள்ளவனே!

 எதிரிகளுக்குத் துன்பத்தைக் கொடுக்கக்கூடிய பரிசுத்தியை உடையவனே! துயில் எழு. 

பொற்கலசம் போன்ற ம்ருதுவான திருமுலைத்தடங்களையும் சிவந்த வாயையும் மெல்லிய இடையையும் உடைய நப்பின்னைப் பிராட்டியே! பெரிய பிராட்டியைப் போன்றவளே! துயில் எழு. 

நோன்புக்குத் தேவையான திருவாலவட்டத்தையும் கண்ணாடியையும் எங்களுக்குக் கொடுத்து உனக்கு நாதனான கண்ணனையும் கொடுத்து இப்போதே, நீயே அவனுடன் எங்களை நீராட்ட வேண்டும்.



நன்றி - Upasana Govindarajan Art



 ஸ்ரீ கோதை நாச்சியார், திருநீர்மலை

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்





2 comments:

  1. வணக்கம் சகோதரி

    இன்றைய திருப்பாவை பாசுரமும், அதன் விளக்கமும் மிகவும் நன்றாக உள்ளது. திருநீர்மலை கோதை நாச்சியாரை தரிசித்து கொண்டேன். ஸ்ரீ கண்ணன் திருவடிகளும், ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே துணை. ஓம் நமோ நாராயணாய நமஃ. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. பாசுரமும் அதற்கான விளக்கமும் நன்று. தொடர்கிறேன்.

    ReplyDelete