13 January 2022

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...

 



ஆண்டாள் வாழித்திருநாமம்


திருவாடிப் பூரத்து  செகத்து உதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும்  செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளை வாழியே

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே

மருவாரும்  திருமல்லி வள நாடி வாழியே

வண் புதுவை நகர்க் கோதை மலர்ப் பாதங்கள் வாழியே 











அன்னவயல் புதுவை ஆண்டாள் * அரங்கற்குப்

பன்னு திருப்பாவைப் பல்பதியம் * - இன்னிசையால்

பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு


சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! * தொல்பாவை 

பாடி அருளவல்ல பல்வளையாய்! * நாடி நீ

வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் *

நாம் கடவா வண்ணமே நல்கு.








கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்
சோதி மணிமாடம் தோன்றும் ஊர்  -நீதியால்
 நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும்  வம்பு.







ஸ்ரீ  ஆண்டாளின் அனுகிரகத்தால் தினமும் பாசுரங்களை,
 அழகிய படங்களுடன்   பதிவிடும் பாக்கியம் பெற்றேன்... 
இதன் மூலம் பல அற்புத செய்திகளை 
அறியும் வாய்ப்பும் கிடைத்தது ....

இவ்வழகிய படங்களை முக நூலில் பதிவிட்ட அன்பர்களுக்கு நன்றிகள் பல ....

தொடர்ந்து இங்கு வந்து சேவித்து , 
இனிய ஊக்கம் தரும் கருத்துரைகளை தந்த நண்பர்களுக்கும்

 என் மனமார்ந்த நன்றிகள்...





ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



   அன்புடன்
   அனுபிரேம்

5 comments:

  1. நேற்றே வங்கக் கடல் பாடியாச்சா....

    இன்று வாழியேவும் ...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    ஸ்ரீ ஆண்டாள் படங்கள் அருமையாக, அழகாக உள்ளது. தரிசனம் பெற்றுக் கொண்டேன். இனிய திருப்பாவை பாசுரங்களினால் மார்கழி மாதத்தில் தினமும் எங்களை பக்தி பெருக்கில் நனைய வைத்தமைக்கு நன்றி.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. ஆண்டாள் திருவடிகளே சரணம். அருமையான் பதிவுகளை படிக்கவும், பல்வேறு திவ தேசங்களின் கோதை நாச்சியாரை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது மிக்க நன்றி.

    ReplyDelete
  4. ஆண்டாள் திருவடிகளே சரணம். அருமையான் பதிவுகளை படிக்கவும், பல்வேறு திவ தேசங்களின் கோதை நாச்சியாரை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ஆண்டாள் திருவடிகளே சரணம். அருமையான் பதிவுகளை படிக்கவும், பல்வேறு திவ தேசங்களின் கோதை நாச்சியாரை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது மிக்க நன்றி.

    ReplyDelete