16 November 2018

வெள்ளை பூக்கள்

வாழ்க நலமுடன்







வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே

மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே

மலர்கள் சோம்பல் முறித்து எழுகவே

குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்



உலகம் விடியட்டுமே! பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்










(வெள்ளைப் பூக்கள்)

காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும்

ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ!

கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்

துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ!









எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ

அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே!

எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ

அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே!





வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  KRP அணை யில் எடுத்த சில படங்கள் இவை...


அன்புடன்
அனுபிரேம்


5 comments:

  1. படங்களும் பாடலும் அருமை...
    பூக்கள் கண்களைக் கவர்கின்றன...

    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  2. ​வெண்மலர்கள் யாவும் அருமை. கண்ணைக் கவர்கின்றன. வரிகளையும் ரசித்தேன்.

    ReplyDelete
  3. பாடல் வரிகளும் வெள்ளைப் பூக்களும் அழகு.

    ReplyDelete
  4. 1,2,3 படத்தில் இருப்பவை நாங்க நித்தியகல்யாணி என்போம். நிறைய பூக்கும் பார்க்க அழகா இருக்கும்.
    அழகான படங்கள்.நல்லதொரு பாடல்.

    ReplyDelete
  5. வெள்ளைப் பூக்கள் படங்களும் அருமை, வரிகளும் அருமை சகோதரி/அனு

    ReplyDelete