07 February 2025

மத்வ நவமி -- இன்னும் சில தகவல்கள்

வாழ்க வளமுடன் 

 நேற்றைய பதிவில் மத்வ நவமி பற்றி பார்த்தோம்..

இன்று மத்வ நவமி பற்றி குருஜி (குருஜி கோபாலவல்லி தாசர்  ) வெளியிட்ட காணொளியை பகிர்கிறேன். படிப்பதை விட காணும் பொழுது இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா.

நன்றி - குருஜி

 

  உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் திவ்ய சேவை 










145.   
முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி*  நின்
காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு* 
மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப்*  
பசுநிரை மேய்த்தாய்*
சிலை ஒன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா!*  
திரு ஆயர்பாடிப் பிரானே!* 
தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே*  
விட்டிட்டேன் குற்றமே அன்றே?




231.   
தாய்மார் மோர் விற்கப் போவர்*  தமப்பன்மார் 
கற்றா நிரைப் பின்பு போவர்* 
நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை*  
நேர்படவே கொண்டு போதி*
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து*  
கண்டார் கழறத் திரியும்* 
ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு 
அஞ்சுவன் அம்மம் தரவே*



1302.   

பட அரவு உச்சி தன் மேல்*  பாய்ந்து பல் நடங்கள் செய்து* 
மடவரல் மங்கை தன்னை*  மார்வகத்து இருத்தினானே!*
தடவரை தங்கு மாடத்*  தகு புகழ் நாங்கை மேய* 
கடவுளே! காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.   


1993.   
தந்தை தளை கழலத்*  தோன்றிப் போய்,*  ஆய்ப்பாடி- 
நந்தன் குல மதலையாய்*  வளர்ந்தான் காண் ஏடீ,*
நந்தன் குல மதலையாய்*  வளர்ந்தான் நான்முகற்குத்* 
தந்தை காண் எந்தை*  பெருமான் காண், சாழலே.

  

1994.   
ஆழ் கடல் சூழ் வையகத்தார்*  ஏசப் போய்,*  ஆய்ப்பாடித்- 
தாழ் குழலார் வைத்த*  தயிர் உண்டான் காண் ஏடீ,*
தாழ் குழலார் வைத்த*  தயிர் உண்ட பொன் வயிறு,*  இவ்- 
ஏழ் உலகும் உண்டும்*  இடம் உடைத்தால் சாழலே.

ஸ்ரீ  கிருஷ்ணா உன் திருவடிகளே சரண்.. 


அன்புடன்

அனுபிரேம்💞💞💞

No comments:

Post a Comment