08 March 2020

மகளிர் தினம் .........💙💚💛💜💙💚💛💜










ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.



மார்ச்-8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள்,

தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால்,

அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும்.

இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு, காரணமான‌ போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை.

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது.

1910-ம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது.

இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரா செர்கினே, ஒரு தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார்.

அந்த தீர்மானத்தின் முக்கிய சாரம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால், அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது.

இதற்கிடையில், 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார்.

அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.




மகளிர் தின வரலாறு!


 1789-ம் ஆண்டு ஜூன் 14-ம்‌ தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து,
பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும்,
வேலைக்கு ஏற்ற ஊதியம்,
எட்டுமணி நேர வேலை,
பெண்களுக்கு வாக்குரிமை,
பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

1909-ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம்,
1910-ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு,
1911-ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம்,  1912-ல் Bread and roses வாசகம்,
1914-1916-ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம்,
1917-ல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம்,
1945 தனி பெண்ணுக்கான உரிமை,
உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம்.

1975-1977 ம்  ஆண்டு சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது.

2014-லிருந்து  100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.







அழகான , அன்பான கட்டமைப்பில் இன்று நம் சமூகம் உள்ளது .
அதை காத்து வழிநடத்தும் பொறுப்பு இன்றைய பெண்களான நமக்கு அதிகம் உள்ளது .


இன்றைய சமூகத்தில் இரு விதமான ஆண்களையும் காண்கிறேன்....

பெண்ணை போற்றி பாதுகாப்போறும் , அவளை தன்னில் பாதி  என்று கொண்டாடுவோரும் ......அத்தகை குடும்ப சூழல் அமைய பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.


ஆனால்  நாணயத்தில்  அடுத்த முகமாக , பெண்ணை கீழாக நினைத்து வாழ்வோரும், அவளை தனது அடிமை என பாவிக்கும் எண்ணம் கொண்டோரும்  உள்ளனர்.
அத்தகைய சுற்றம் வாய்க்க  பெற்ற பெண்கள்  இன்னும் என பல சோதனைகளையும் , வேதனைகளையும் கடக்க  வேண்டிய  சூழல்  ...


ஆக  பெண்ணாகிய நாம்  நம் சகோதரிகளை

அன்பு செய்வோம் ...

பாராட்டுவோம் ...

பேணுவோம் ...

போற்றுவோம் ...

மதிப்போம் ....

உயர்த்துவோம் ...

மகிழ்விப்போம் ....

அனைத்து செயல்களையும்  நாமே  ஆரம்பிப்போம் ... செயல்படுத்துவோம்...

அன்பு என்றும் எங்கும் ஆளட்டும்...


இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் ...💙💚💛💜💙💚💛💜






அன்புடன்
அனுபிரேம்


5 comments:

  1. பெண்மை போற்றுவோம்....

    மகளிர் தின கொண்ட்டாட்டங்கள் பற்றிய தகவல்கள் நன்று.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மகளிர் தின நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. மகளிர் தின பதிவு அருமை.
    மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    நல்ல தகவல்கள். பதிவின் சாராம்சங்களும் பொருள் நிறைந்து ஆழமானவையாக இருக்கின்றன. படித்து ரசித்தேன். தங்களுக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. மகளிர்தின தகவல்கள் அருமை.
    மகளிர்தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete