05 March 2022

திருவல்லிக்கேணி - ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் தெப்போத்ஸவம்

திருவல்லிக்கேணி தெப்போத்ஸவம் - 2ம் திருநாள் - ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி ..




































முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...


பெரிய திருமொழி - இரண்டாம்பத்து

மூன்றாம் திருமொழி – வில் பெரு விழவும்

1072

இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் 
இன்பன், நல் புவி தனக்கு இறைவன் * 
தன் துணைஆயர் பாவை நப்பின்னை 
தனக்கு இறை, மற்றையோர்க்கு எல்லாம் 
வன் துணை * பஞ்ச பாண்டவர்க்கு ஆகி 
வாய்  உரை தூது சென்று இயங்கும் 
என் துணை * எந்தை தந்தை தம்மானைத் 
திருவல்லிக்கேணிக் கண்டேனே.




1073
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு 
இளையவன் அணி இழையைச் சென்று *
எந்தமக்கு உரிமை செய் என, தரியாது
எம் பெருமான்! அருள்! என்ன *
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி, நூலிழப்ப *
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றானைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே.


திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி  பெருமாள்  திருவடிகளே சரணம் ....

அன்புடன் 
அனுபிரேம் 


3 comments:

  1. கோயிலுக்குச் சென்றுள்ளேன். விழாவில் கலந்துகொண்டதில்லை. இப்பதிவு மூலமாகக் கலந்துகொண்ட உணர்வு. நன்றி.

    ReplyDelete
  2. அழகான தரிசனம் எனக்கும் கிடைத்தது.

    ReplyDelete
  3. நல்லதொரு தரிசனம் கண்டேன். நன்றி.

    ReplyDelete