01 April 2026

பிரணய கலகம்! --- மட்டையடி உற்சவம்

 இன்று  பங்குனி உத்திரம்-நம்பெருமாள், பெரிய பிராட்டியார்  சேர்த்தி உற்சவம்: பிரணய கலகம் !



31 March 2026

ஸ்ரீ ரங்கத்தின் எல்லைக்கரைக்கு எழுந்தருளும் நம்பெருமாள் !!

 ஸ்ரீ ரங்கத்தின் எல்லைக்கரைக்கு எழுந்தருளும் நம்பெருமாள் !!


எட்டாம் திருநாளான இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டு,(கண்ணாடி அறை) பல வீதிகள் வழியாக 16 மண்டபங்களில்/இடங்களில் வழிநடை உபயங்கள் கண்டருளி  5 கி.மீ.தொலைவிலுள்ள எல்லைக்கரை மண்டபத்துக்கு 9 கி.மீ சுற்றி பகல் 01.15க்கு எழுந்தருளினார்.

செல்லும் வழியில் இரண்டு தீர்த்தங்களில் --அஸ்வ தீர்த்தம்,பிலவ தீர்த்தம்--திருவடி(சடாரி) விளக்கினார்.

(இந்தத் தீர்த்தங்களைப் புனரமைத்து, தூய்மைப் படுத்தும் கைங்கர்யத்தை கோவையைச் சேர்ந்த அடியார் ஸ்ரீ ஜெகதீச ராமாநுஜ தாச  அற்புதமாகச் செய்துள்ளார்;அவருக்குப் பல்லாண்டு பாடுவோம்) 

எல்லைக்கரை மண்டபத்தில் திருவாரதனை,அலங்கார அமுது கண்டருள்கிறார். மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதித்து விட்டு,மாலை 6 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு வந்து கிழக்குச் சித்திரை வீதியில் (கோரதம் அருகில்) இரவு 8 மணிக்கு வையாளி கண்டருள்கிறார். இரவு 9.மணிக்கு ஆஸ்தானம் வந்தடைகிறார்.




மேல்கோட்டை ஸ்ரீ செல்வநாராயணர் வைரமுடி சேவை 2026

 மேல்கோட்டை திருநாராயணபுரம் ஸ்ரீ செல்வநாராயண பெருமாள் திருக்கோயில் - வைரமுடி உத்ஸவம் - திவ்ய ஸேவை

பங்குனி மாதப் பூச நட்சத்திரத்தில் நடைபெறும் 'வைரமுடிச் சேவை' விழாவில், இராமானுசர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து வைரமுடிச் சேவை கொண்டாடுகின்றனர். 

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி, திருமலை பிரம்மோற்சவம், காஞ்சிபுரம் கருடசேவை போல வைணவார்களால் பெரிதும் போற்றப்படும் மிகப்பெரிய திருவிழா "மேல்கோட்டை வைரமுடி சேவை" யாகும்.


நேற்று நடைப்பெற்ற வைரமுடி சேவையின் காட்சிகள் இன்று ...



30 March 2026

ஸ்ரீநம்பெருமாள் - கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை 2026

 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்-- பங்குனி திருநாள் (ஆதி பிரம்மோற்சவம்) 6-ம் திருநாள்  

ஸ்ரீநம்பெருமாள் - ஸ்ரீகமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை நேற்று -

நம்பெருமாள் உறையூர் புறப்பாடு



27 March 2026

16 வார்த்தையில் ஸ்ரீ ராமாயணம்...





ஸ்ரீ ராம நவமி

பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - ஸ்ரீ ராமனின் பிறந்த நாள்.

இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.




26 March 2026

108 வரிகளில் இராமாயணம் ...


வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணத்தின்  ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில்...



25 March 2026

எளிய வரிகளில் இராமாயணம்

பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - ஸ்ரீ ராமனின் அவதார  நாள்.  இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.  







14 March 2026

தொட்டையாசார்யர் - மாசி உத்திராடம்

சோழசிம்மபுரம் (திருக்கடிகை ) ஸ்வாமி தொட்டையாசார்யர் வருஷ திருநக்ஷத்திரம்  இன்று மாசி உத்திராடம் ( 14-03-2026 ) 



12 March 2026

திருநாராயணபுரத்தில் "டில்லி உற்சவம்" !! - மாசிக் கேட்டை

 திருநாராயணபுரத்தில் "டில்லி உற்சவம்" !!

சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு மாசிக் கேட்டை திருநாளன்று தான், திருநாராயணபுரம் செல்வ(ல)ப்பிள்ளை --ஸ்ரீராமப் பிரியன் டில்லியிலிருந்து, திருநாராயணபுரத்துக்கு எழுந்தருளினார்.



26 February 2026

திருக்கச்சி நம்பிகள் - மாசி மிருகசீரிஷம்

 மாசி மிருகசீரிஷம் திருக்கச்சி நம்பிகள் அவதார நக்ஷத்திரம் திருநாள் இன்று 




06 February 2026

கூரத்தாழ்வான் திருநக்ஷத்திரம் -- தை ஹஸ்தம்

ஸௌம்ய ஆண்டு (கி.பி. 1009) தை மாதம் - ஹஸ்த நட்சத்திரத்தில் 

கூரம் என்னும் ஊரில் திருமாலின்  ஸ்ரீ வஸ்தம் என்னும் திருமறுவின்

 அவதாரமாக  ஸ்ரீ வத்ஸாங்கமித்ரர், திருமறுமார்பன் என்ற திருநாமத்தோடு 

ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமி  அவதரித்த தினம் இன்று. 

ஜகதாச்சார்யார் பகவத் ராமாநுஜர் இவரை "பவித்ரமாக" பாவிப்பார். 




03 February 2026

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருநக்ஷத்திரம் - தையில் மகம்

 இன்று  திருமழிசை ஆழ்வார்   அவதார திருநட்சத்திரம் -  தையில் மகம் ...

ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வாரான திருமழிசை ஆழ்வார் அவதார நட்சத்திரம்.  திருமாலின் சுடராழியின் (சக்கரம்) அம்சமான, இவர் திருமழிசை; ஜெகந்நாதப் பெருமாள் திருத்தலத்தில் (பூவிருந்தவல்லிக்கு அருகில்) ,பார்கவ மகரிஷிக்கும்,கனகாங்கிக்கும் திருக்குமாரராகத் தோன்றினார்.




02 February 2026

தை பூசம் - குரு புஷ்யம்

 குரு புஷ்யம்

நேற்று  தை மாதம் பூச/புஷ்ய நட்சத்திரம். இந்த திருநட்சத்திரத்தன்று தான், எம்பெருமானாரின் "தானுகந்த திருமேனி", கந்தாடை ஆண்டான் ஸ்வாமியால் (கி.பி.1137)ஶ்ரீ பெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

எனவே இந்த நட்சத்திரம் குருபுஷ்யம் என்று கொண்டாடப்படுகிறது.





01 February 2026

31 January 2026

ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள்

 ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் ஆயிரமாவது ஆண்டு விழா 

திருநக்ஷத்திரம் : “தை”- புனர்பூசம் 

அவதார ஸ்தலம் :  ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம்

இன்று 31/ 01 /2026 , தை புனர்பூசம், ஸ்ரீ எம்பார் ஸ்வாமியின் 1000 ஆவது திருநட்சித்திரம்.











29 January 2026

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் ❤️

மன்னார்குடி ஸ்ரீவித்யா ராஜகோபாலசுவாமி திருக்கோவில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் ❤️

 

இராஜமன்னார்குடி  ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில்  மஹா ஸம்ப்ரோக்ஷண நேற்று நடைப் பெற்றது. அவ்விழாவின் காட்சிகள் இன்று ..



27 January 2026

இன்று மத்வ நவமி

 இன்று மத்வ நவமி..

மாத்வ சம்பிரதாயத்தை தோற்றுவித்த மஹான் ஸ்ரீ மத்வாச்சாரியார் பத்ரிகாச்ரமம் பிரவேசித்த தினம்.





19 January 2026

1. திருநாங்கூர் பதினொரு கருட சேவை - 2026

 திருநாங்கூர் பதினொரு கருட சேவை - 2026 (132ஆம் ஆண்டு)

தை அமாவாசை (18/01/2026) தொடங்கி 3 நாட்கள் திருநாங்கூரில் (சீர்காழிக்கு அருகில்-12 கி.மீ) 11 எம்பெருமான் களின் கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது.

திருமங்கை ஆழ்வாரே இந்த உற்சவத்தை நடத்தி வைப்பதாக ஐதீகம். இந்த உற்சவத்தைப் பற்றிய விவரங்களை இந்தத் தொடரில் அனுபவிப்போம்.


15 January 2026

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  அனைவருக்கும்  எங்களின் இதயம் கனிந்த 

பொங்கல் நல் வாழ்த்துக்கள் !! 




13 January 2026

திருப்பாவை 30

  முப்பதாம் பாசுரம் - எம்பெருமான் தன் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகச் சொல்ல, ஆண்டாள் இப்பொழுது கோபிகை பாவத்தை விட்டு, தானான தன்மையில் இப்பாசுரத்தைப் பாடுகிறாள். 

அவள் யாரொருவர் இந்த முப்பது பாசுரங்களையும் கற்றுக் கொண்டு பாடுகிறார்களோ, அவர்கள் தன்னைப் போன்ற பரிசுத்த பாவத்துடன் இல்லாவிடினும், தனக்குக் கிடைத்த அதே கைங்கர்ய ப்ராப்தி அவர்களுக்கும் கிடைக்கும் என்று அறுதியிடுகிறாள். 







12 January 2026

திருப்பாவை 29

 இருபத்தொன்பதாம் பாசுரம் -  இதில் மிகவும் முக்யமான கொள்கையை வெளியிடுகிறாள் – அதாவது, கைங்கர்யம் நம் ஆனந்தத்துக்கு இல்லை அவனுடைய ஆனந்தத்துக்கு மட்டுமே. மேலும் க்ருஷ்ணானுபவத்தில் கொண்ட மிகப் பெரிய அவாவினால், இந்த நோன்பை அதற்கு ஒரு வ்யாஜமாக மேற்கொண்டதையும் தெரிவிக்கிறாள்.





11 January 2026

திருப்பாவை 28

  இருபத்தெட்டாம் பாசுரம் -  இதில் எம்பெருமான் அனைத்து ஆத்மாக்களுடன் கொண்டுள்ள நிருபாதிக ஸம்பந்தம், (ஆண்டாளாகிய) தான் எந்த ஸாதனத்திலும் ஈடுபட முடியாத இயலாமை, எம்பெருமானின் பெருமை, அவன் தானே யவரையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  உஜ்ஜீவிப்பிக்கும் தன்மை ஆகியவைகளை விளக்குகிறாள்.