08 August 2021

ஶ்ரீவில்லிபுத்தூர் ஐந்து பெருமாள் கருட சேவை ....

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருவாடிப்பூர பிரம்மோற்சவம்..

5 ஆம் திருநாள் இரவு ஐந்து பெருமாள் கருட சேவை நடைபெற்றது....

ஸ்ரீஆண்டாள் (பெரிய அன்ன வாகனம் )

பெரியாழ்வார் (சின்ன அன்ன வாகனம் )




ரங்கமன்னார் (தங்க கருட வாகனம்)

பெரிய பெருமாள் (கருட வாகனம்)

திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் (கருட வாகனம்)

சுந்தரராஜ பெருமாள்(காட்டழகர்) (கருட வாகனம்)

திருத்தங்கல்அப்பன் (தங்க கருட வாகனம்) ...



















நாச்சியார் திருமொழி

ஐந்தாம் திருமொழி - மன்னு பெரும்புகழ்

எம்பெருமானைக் கூவியழைக்கும்படி குயிலுக்கு கூறுதல்



மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி

வண்ணன் மணி முடி மைந்தன்

தன்னை * உகந்தது காரணமாக என்

சங்கு  இழக்கும் வழக்கு உண்டே? *

புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்

பொதும்பினில் வாழும் குயிலே! *

பன்னி எப்போதும் இருந்து விரைந்து என்

பவள வாயன் வரக் கூவாய். (2)

1 545


வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட

விமலன் எனக்கு உருக் காட்டான் *

உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும்

 உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும் *

கள் அவிழ் செண்பகப் பூமலர் கோதிக்

களித்து இசை பாடும்  குயிலே! *

மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என்

வேங்கடவன் வரக் கூவாய்.

2 546



இணையத்தில் இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

ஆண்டாள் ரெங்கமன்னார் திவ்ய திருவடிகளே சரணம்



அன்புடன்
அனுபிரேம்

1 comment: