08 January 2019

திருப்பாவை – பாசுரம் 24


அன்றிவ்வுலகம் 
"கிருஷ்ணா, நீ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்"




அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி!

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!

பொன்றக் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!

கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி!

குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!

என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்

இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.



நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு



மஹாபலி காலத்தில் இவ்வுலகங்களை அளந்த 

உன் திருவடிகளைப் போற்றுகிறோம்!

தென் இலங்கையைச் சென்று இராவணனை அழித்தாய்! 

உன் திருத்தோள் வலிமையைப் போற்றுகிறோம்!

சகடாசுரனைக் கட்டுக்குலைய உதைத்தாய்! 

உன் புகழை போற்றுகிறோம்!

கன்று வடிவில் வந்த வத்ஸாசுரனை எரிகருவியாகக் கொன்றாய்! 

உன் திருவடிகளைப் போற்றுகிறோம்!

கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து,

 கோகுலத்தைக் காத்தவனே! 

உன் குணத்தைப் போற்றுகிறோம்!

பகைவர்களை அழிக்கும் உன் கையிலுள்ள வேலைப் போற்றுகிறோம்!

இவ்வாறு எப்பொழுதும் உன் வீரத்தைப் பாடி, 
எங்கள் விருப்பங்களை
நிறைவேற்றிக்கொள்ள இங்கு வந்துள்ளோம், 

நீ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.






ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. பாடலும் அதன் கருத்துரையும் அழகு! ஓவியம் அருமை!

    ReplyDelete
  2. அருமையா இருக்கு படமும் விளக்கமும் அனு...

    கீதா

    ReplyDelete
  3. படங்களும், பாடலின் விளக்கவுரையும் மிக அருமை.

    ReplyDelete
  4. இன்றைக்கு பகிர்ந்து கொண்ட படங்கள் ரொம்பவும் அழகு.

    ReplyDelete