14 January 2020

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...







ஆண்டாள் வாழித்திருநாமம்




திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே

உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே

மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே

வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே









அன்னவயல்புதுவையாண்டாள் * அரங்கற்குப்

பன்னு திருப்பாவைப் பல்பதியம் * - இன்னிசையால்

பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை

சூடிக்கொடுத்தாளைச் சொல்லு

சூடிக்கொடுத்தசுடர்க்கொடியே! * தொல்பாவை

பாடிஅருளவல்லபல்வளையாய்! * நாடி நீ

வேங்கடவற்குகென்னைவிதியென்றஇம்மாற்றம் *

நாம்கடவாவண்ணமேநல்கு.











ஸ்ரீ  ஆண்டாளின் அனுகிரகத்தால் 

தினமும் பாசுரங்களை, அழகிய படங்களுடன்  

பதிவிடும் பாக்கியம் பெற்றேன்...

இவ்வழகிய படங்களை முக நூலில்

பதிவிட்ட அன்பர்களுக்கு நன்றிகள் பல ....

தொடர்ந்து இங்கு வந்து சேவித்து ,

 இனிய ஊக்கம் தரும் கருத்துரைகளை தந்த நண்பர்களுக்கும்


 என் மனமார்ந்த நன்றிகள்...


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



   அன்புடன்
   அனுபிரேம்

2 comments:

  1. ஸ்ரீ ஆண்டாளின் அனுகிரகத்தால்

    தினமும் பாசுரங்களை, அழகிய படங்களுடன்

    பதிவிடும் பாக்கியம் பெற்றேன்...

    அடுத்த ஆண்டும் இந்த பாக்கியம் கிடைக்கட்டும் கோவிந்தன் அருளால்.


    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



    ReplyDelete
  2. தொடர்ந்து பதிவிட்ட உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    படங்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருந்தன. எடுத்தவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete