20 October 2022

ஜடாயு பூங்கா...

 வாழ்க வளமுடன் ...








பசவண்ணர் தரிசனம் செய்துவிட்டு, நிமிர்ந்து பார்த்தால் மிக பெரிய ஜடாயு அங்குள்ள பாறை  மீது அமர்ந்து உள்ளது. 


பசவண்ணர் கோவிலிருந்து சிறிது தொலைவில் சில ஆண்டுகளுக்கு முன்னால்  ஆந்திர அரசால் உருவாக்கபட்ட பூங்கா  இது. கருடரின் சிலையும், ஏறும் வழியும்  நல்ல பராமரிப்பில் உள்ளன.





இங்கு உள்ள சிறு மலையில் ஏறினால் கருடரை காணலாம். இரும்பினால் ஆன  படிகள் உள்ளன.




இங்கிருந்து வீரபத்திர சுவாமி கோவிலையும், பசவண்ணர் சிலையையும் காண முடியும் .




வீரபத்திரர் கோவில் 

மலையின் மேல் உள்ள கோவில் 






இன்னும் செடிகள் எல்லாம் வைத்து பராமரிப்பு செய்யும் திட்டம் உள்ளது போல, நல்ல விசாலமான இடமாக  இந்த இடம் உள்ளது. 

நல்ல வெயில் நேரத்தில் இந்த மலையில்  ஏறுவது கடினம். வெயில் வருவதற்கு முன்னாலே ஏற வேண்டும். வித்தியாசமான அனுபவம், மலை  ஏறும் ஆசை உள்ளவர்களுக்கு மகிழ்வு தரும் மலை ...

 












இங்கிருந்து அடுத்து  எங்கு சென்றோம் அடுத்த பதிவில் தொடரும்... 


அன்புடன் 
அனுபிரேம் 💕💕





2 comments:

  1. ஜடாயு பூங்காவுக்கு ஏறிச் சென்று பார்க்க நேரமிருக்கவில்லை. (குன்றின் கீழிருந்து படம் மட்டும் எடுத்திருந்தேன்). தங்கள் படங்களும் காணொளிகளும் அந்தக் குறையைத் தீர்த்தன. பகிர்வு அருமை!

    ReplyDelete
  2. ஜடாயு பூங்காவும் அழகாக இருக்கிறது அனு. காணொளிகள் எல்லாமே அருமையாக இருக்கு.

    கீதா

    ReplyDelete