29 March 2023

இராம புத்திரர்களான லவ குசர்கள் பாடிய பாடல்...

 கும்பகோணம் ஸ்ரீ ராமசாமி திருக்கோயில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் கோரதத்தில் சுவாமி 






1963 ஆம் ஆண்டு வெளிவந்த ‘லவகுசா’ திரைப்படத்தில் முழு ராமாயணத்தையும் விளக்கும் வகையில் இராம புத்திரர்களான லவ குசர்கள் பாடிய பாடல். கவிஞர் மருதகாசி இயற்றி பி.சுசீலா அவர்களும் பி.லீலா அவர்களும் பாடியிருக்கும்  அற்புத பாடல்.  


ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே


ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே


இகபர சுகமெலாம் அடைந்திடலாமே

இந்தக் கதை கேட்கும் எல்லோருமே

இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே

இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே

இணையே இல்லாத காவியமாகும்


ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே


அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்

அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை

கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்

கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வன்


நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை

ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே

காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே

கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே

தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே

தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே

பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்

பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்

சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே


வீதியில் சென்றிடும் போதிலே ராமன்

சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்

காதலினால் இருவர் கண்களும் கலந்தன

காதலினால் இருவர் கண்களும் கலந்தன

கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்

ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்

அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்

அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்

அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்


ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே


ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே


ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே


மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு

மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு

மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே

மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே

மகர தோரணத்தால் அலங்கரித்தாரே

மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி

மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்

வனத்தில் ராமன் பதினான்கண்டுகள்

வாழவும் மன்னனிடம் வரமது கேட்டாள்


அந்த சொல்லைக் கேட்ட மன்னர்

மரண மூர்ச்சை அடைந்த பின்னர்

ராமனையும் அழைக்கச் செய்தாள்

தந்தையுனை வனம் போகச் சொல்லி

தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்

சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்

சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்

விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த

தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்


இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே

மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே

மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே


கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே


ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்

அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே

அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே

அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே


ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே


ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்


செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்


செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே


கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்

அன்பால் ராமபிரான் நண்பனாகினான்

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்

அன்பால் ராமபிரான் நண்பனாகினான்

பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்

பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்

அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்


ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை

ராமபிரான் மீது மையல் கொண்டாள்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை

ராமபிரான் மீது மையல் கொண்டாள்

கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை

மானபங்கம் செய்து விரட்டி விட்டான்

தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்

ஜானகி தேவியை சிறையெடுத்தான்

தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்

ஜானகி தேவியை சிறையெடுத்தான்

நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி

தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்

ராமன் தேடிச் சென்றான்


வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்

வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்

ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்

அன்னையை அசோகவனத்தில் கண்டான்


ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்

லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்

கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்

கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்

வானர சேனையுடன் சென்றான்

விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்

வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்


கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்

கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்

அரசுரிமை கொண்டான்


ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே


ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே


ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்

சீதாபதிம் ரகுகுலான்மயரக்ஷமீயம்

ஆஜானுபாகும் அரவிந்த தளாய தாட்ச்ம்

ராமம் நிசாசர விநாசகரம் நமாமி









 பெரிய திருமொழி
10 -3. ஏத்துகின்றோம் 
இராமாவதார ஈடுபாடு 



ஞாலம் ஆளும் உங்கள் கோமான்*  எங்கள் இராவணற்குக்*

காலன் ஆகி வந்தவா*  கண்டு அஞ்சி, கரு முகில் போல்*

நீலன் வாழ்க! சுடேணன் வாழ்க!*  அங்கதன் வாழ்க! என்று*

கோலம் ஆக ஆடுகின்றோம்*  குழமணி தூரமே  3

1870




மணங்கள் நாறும் வார் குழலார்*  மாதர்கள் ஆதரத்தை*

புணர்ந்த சிந்தைப் புன்மையாளன்*  பொன்ற, வரி சிலையால்*

கணங்கள் உண்ண, வாளிஆண்ட*  காவலனுக்கு இளையோன்*

குணங்கள் பாடி ஆடுகின்றோம்*  குழமணி தூரமே 4

1871


















ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !



அன்புடன் 
அனுபிரேம் 💖💖

2 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ஸ்ரீ ராம நவமி வாழ்த்துகள். படங்கள் அனைத்தும் சிறப்பு. ஸ்ரீ ராமபிரானை தரிசித்து கொண்டேன். பாடல் அடிக்கடி கேட்டு ரசித்தப்பாடல் ஒரளவு மனப் பாடமாகவே மனத்தோடு அமர்ந்து விட்டது. அருமையான படங்களுக்கும், பாடல் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. படங்கள் செம, அனு. நாளை ராம நவமி இல்லையா.

    ரசிக்கும் பாடல்...

    கீதா

    ReplyDelete