08 April 2022

அகரத்தில் ஓர் இராமாயணம்....

 ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ....    ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ...

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ....





 அகரத்தில் ஓர் இராமாயணம் == இராமாயண கதை முழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


“அனந்தனே அசுரர்களை அழித்து, 

அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான்.

அப்போது அரிக்கு அரணாக 

அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.


அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன்?

அவனே அறிவழகன், 

அன்பழகன், 

அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்!


அயோத்தி அடலேறு, 

அம்மிதிலை அரசவையில் அரசனின் அரியவில்லை அடக்கி, 

அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் .


அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்தராமனுக்கே! 

அப்படியிருக்க அந்தோ !


அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல்

 அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள் .

அங்கேயும் அபாயம்! 


அரக்கர்களின் அரசன் , 

அன்னையின் அழகால் அறிவிழந்து 

அபலையை அபகரித்தான் 

அங்கேயும் அபாயம்!


 அந்த  அடியார்களில்  

அருகதையுள்ள  

அன்பனை  அரசனாக 

அரியணையில்  அமர்த்தினர். 


அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் 

அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர் .


அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து 

அளந்து அக்கரையை அடைந்தான் .


அசோகமரத்தின் அடியில் , 

அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை அடிபணிந்து 

அண்ணலின் அடையாளமாகிய 

அக்கணையாழியை அவளிடம் அளித்தான். 


அன்னை அனுபவித்த அளவற்ற 

அவதிகள் அநேகமாக அணைந்தன .


அன்னையின் அன்பையும் அருளாசியையும் 

அக்கணமே அடைந்தான் அனுமன் .


அடுத்து,

 அரக்கர்களை அலறடித்து , 

அவர்களின் அரண்களை ,

 அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம் , 

அசாத்தியமான அதிசாகசம் .


அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி , 

அதிசயமான அணையை அமைத்து, 

அக்கரையை அடைந்தான் .


அரக்கன் அத்தசமுகனை அமரில் 

அயனின் அஸ்திரத்தால் அழித்தான் .


அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை 

அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள் .


அன்னையுடன் அயோத்தியை அடைந்து 

அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல் .


அனந்தராமனின் அவதார அருங்கதை 

அகரத்திலேய அடுக்கடுக்காக அமைந்ததும்

 அனுமனின் அருளாலே “.


(படித்ததில் பிடித்தது)


திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில்  --- ஸ்ரீராம நவமியை உற்சவத்தை முன்னிட்டு நான்காம் நாள்  ---- ஸ்ரீராமபிரான் பட்டாபிஷேக திருக்கோலம்.
















பெரிய திருமொழி

பத்தாம் பத்து

மூன்றாம் திருமொழி - ஏத்துகின்றோம்


இராமவதாரத்தில் ஈடுபாடு – 2


ஏத்துகின்றோம் நாத் தழும்ப இராமன் திருநாமம் *

சோத்தம், நம்பீ! சுக்கிரீவா! உம்மைத் தொழுகின்றோம் *

வார்த்தை பேசீர், எம்மை உங்கள் வானரம் கொல்லாமே *

கூத்தர் போல ஆடுகின்றோம் குழமணி தூரமே. (2) 

1 1868



எம்பிரானே! என்னை ஆள்வாய்! என்று  என்று அலற்றாதே *

அம்பின் வாய்ப்பட்டு, ஆற்றகில்லாது, இந்திரசித்து அழிந்தான் *

நம்பி அநுமா! சுக்கிரீவ! அங்கதனே! நளனே! *

கும்பகர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே.

2 1869















ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதா ராம்....
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !


அன்புடன் 
அனுபிரேம் 💖💖

1 comment:

  1. அகரத்தில் இராமாயணம் படித்து மகிழ்ந்தேன். நன்றி.

    ReplyDelete