22 April 2022

பதினேழாம் திருநாள் -- ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருத்தேர் உத்ஸவம்

  இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...



பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள், 

 இரண்டாம் நாள் - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

 மூன்றாம் திருநாள்  இரவு  - இராஜ அலங்காரத்திலும் ,

 நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்திலும்  ...

 ஐந்தாம் திருநாள்  -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் மரவூரி இராமர் திருக்கோலம்....

 ஆறாம் திருநாள் -  கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....

 ஏழாம் திருநாள்  ---இரவு புஷ்ப பல்லக்கில்  இராஜ அலங்காரம்

 எட்டாம் திருநாள்   --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில் 

ஒன்பதாம் திருநாள் - சிம்ம வாகனம் இராஜ அலங்காரத்தில் 

பத்தாம் திருநாள் - கிளி கண்ணன் திருக்கோலம் மற்றும்  வேணுகோபாலன் திருக்கோலம் 

பதினொன்றாம் திருநாள்  --- இரவு வெள்ளி சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலத்தில்  

பன்னிரென்டாம் திருநாள் ---காலை தங்க பல்லக்கு வைரமுடி சேவை, இரவு தங்க கருட சேவை 

பதிமூன்றாம் திருநாள் ...

காலை  ---- தங்க பல்லக்கு காளிங்கநர்த்தனத்தில் ,

மாலை  ---  ஆண்டாள் திருக்கோலம் ,  

இரவு   ---  வெள்ளி ஹனுமந்த வாகனம் இராமர் திருக்கோலம்...

பதினான்காம் திருநாள்  ----  இரவு யானை வாகனம் இராஜ அலங்காரத்தில் 

 பதினைந்தாம் திருநாள் --  காலை ருக்மணி, சத்யபாமா சமேதராய் பள்ளியறை சேவை கிருஷ்ணர்  திருக்கோலம்

பதினாறாம் திருநாள் --- காலை வெண்ணைத்தாழி நவநீத சேவை

பதினாறாம் திருநாள் --- மாலை வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி அலங்காரம் 

பதினேழாம் திருநாள் --  ருக்மணி,  சத்யபாமா சமேதராய் கல்யாண அவசர திருக்கோலத்தில் திருத்தேர் உத்ஸவம்




















(முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)


பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து 

பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்

இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, 
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் 
கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்


வார் அணிந்த முலை மடவாய்! வைதேவீ! விண்ணப்பம் *

தேர் அணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ! கேட்டருளாய் *

கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கைதன்னில் *

சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்.


4 321


மார்பில் கச்சை அணிந்த பிராட்டியே! எளிமையானவளே! 
விதேஹ குலப் பெண்மணியே! 
ஒரு கோரிக்கை: தேர்களினால் அலங்கரிக்கப்பட்ட அயோத்தி மாநகரத்தின் 
அரசனான ராமபிரானுக்கு உகந்த பெருந்தலைவியே! 
என்னுடைய விண்ணப்பத்தை கேட்டருள வேணும்:
கூர்மையுடைய வேலாயுதத்தை ப்ரயோகப்பதில் வல்லமை படைத்த
குகப் பெருமானுடன் கங்கைக் கரையில் சிறப்பான 
ஸ்னேகத்தை கொண்டதும் ஓர் அடையாளம்.


ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம் 💗💗





1 comment:

  1. படங்களைக் கண்டு மகிழ்ச்சி. பகிர்நது கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete