07 April 2022

ஏழாம் திருநாள் - புஷ்ப பல்லக்கில் ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி ...

 இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...

பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள்,

இரவு - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

பங்குனி பிரமோத்ஸவம் மூன்றாம் திருநாள்  இரவு  - இராஜ அலங்காரத்திலும் ,

 பங்குனி பிரமோத்ஸவம் நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்திலும்  ...

 பங்குனி பிரமோத்ஸவம் ஐந்தாம் திருநாள்  இரவு -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் 

மரவூரி இராமர் திருக்கோலம்....

பங்குனி பிரமோற்சவம் ஆறாம் திருநாள் -  கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....

பங்குனி பிரமோத்ஸவம் ஏழாம் திருநாள்  ---இரவு புஷ்ப பல்லக்கில்  இராஜ அலங்காரம்
































 (முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)

பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து

ஒன்பதாம் திருமொழி - என் நாதன்



மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட * 

ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான்! என்று அழ *

கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன *

சீற்றம் இலாதானைப் பாடிப் பற! 

சீதை மணாளனைப் பாடிப் பற!


4 310


மாற்றாந்தாயோ (கைகேயி) 'நீ காட்டுக்குப் போ' என்றாள்;
 பின் வந்த பெற்ற தாயோ (கௌஸல்யா) 
'அப்பனே, உன்னை எப்படிப் பிரிவேன்' என்றழுதாள்;
ராமனோ, யமனையொத்த கைகேயி-யின் சொல்லைக் கேட்டான்; 
கொடுமையான கானகம் சென்றான்;
கோபமற்றவனைப் பாடி விளையாடு! 
சீதையின் கணவனைப் போற்றி விளையாடு!


ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம் 💗💗

1 comment:

  1. படங்கள் வழி அலங்காரம் கண்டு ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete