16 April 2022

பன்னிரென்டாம் திருநாள் --- காலை வைரமுடி சேவை, இரவு தங்க கருட சேவை

 இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...


பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள், 

 இரண்டாம் நாள் - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

 மூன்றாம் திருநாள்  இரவு  - இராஜ அலங்காரத்திலும் ,

 நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்திலும்  ...

 ஐந்தாம் திருநாள்  -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் மரவூரி இராமர் திருக்கோலம்....

 ஆறாம் திருநாள் -  கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....

 ஏழாம் திருநாள்  ---இரவு புஷ்ப பல்லக்கில்  இராஜ அலங்காரம்

 எட்டாம் திருநாள்   --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில் 

ஒன்பதாம் திருநாள் - சிம்ம வாகனம் இராஜ அலங்காரத்தில் 

பத்தாம் திருநாள் - கிளி கண்ணன் திருக்கோலம் மற்றும்  வேணுகோபாலன் திருக்கோலம் 

பதினொன்றாம் திருநாள்  --- இரவு வெள்ளி சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலத்தில்  

பன்னிரென்டாம் திருநாள் ---காலை தங்க பல்லக்கு வைரமுடி சேவை








பிரமோத்ஸவம் பன்னிரென்டாம் திருநாள் -- இரவு தங்க கருட சேவை வைகுண்டநாதன் திருக்கோலம் இரட்டைகுடை சேவை



























 (முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)


பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து

ஒன்பதாம் திருமொழி - என் நாதன்


மாயச்சகடம் உதைத்து, மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற!
      ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற!

9     315


மாயாவியாய் ஒரு சிறு தேர் வடிவத்தில் வந்த
சகடாசுரனை தன் காலால் உதைத்து அழித்து, இரு
மருது மரங்களின் நடுவே உரலை இழுத்துச்சென்று
அவைகளை வீழ்த்தி, இடையர்களுடன் காட்டிற்க்குப்
போய் பசுக்களை ரக்ஷித்து, அழகான மூங்கில்
குழலை ஊதி மதி மயங்கச் செய்பவனாய் விளங்கிய
இடையர்களின் சிங்கத்தைப் பாடி விளையாடு!
பசுக்களை மேய்த்தவனைப் போற்றி விளையாடு!


ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம் 💗💗

2 comments:

  1. படங்கள் அனைத்தும் அழகு.

    ReplyDelete
  2. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன

    துளசிதரன்

    ReplyDelete