05 April 2022

இராஜ அலங்காரத்திலும் , தங்க கோவர்த்தனகிரீ க்ருஷ்ண அலங்காரத்திலும் ...

 இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...

பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள்,

இரவு - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

பங்குனி பிரமோத்ஸவம் மூன்றாம் திருநாள்  இரவு  -----  வெள்ளி ஹம்ச வாகனத்தில்  இராஜ அலங்காரம்..



















பங்குனி பிரமோத்ஸவம்  ---- நான்காம் திருநாள் 

 இரவு --  தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்தில் 




















 (முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)


பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து

ஒன்பதாம் திருமொழி - என்னாதன்



என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான் 

தன் * வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி *

முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான் *

தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற!

 தாசரதி தன்மையைப் படிப் பற!


2 308



என் வில்லினுடைய வலிமையைப் பார்க்கிறாயா? 
என்று அறை கூவலிட்டு வந்த பரசுராமரின் வில்லை வளைத்தும், 
அவருடைய தபஸ்ஸைக் கவர்ந்தும் அருளினான்! 
இதற்க்கு முன் தாடகை என்ற மூதாட்டி - அரக்கியை 
வில்லை வளைத்து அம்பை எய்து கொன்றான். 
ராமனுடைய வில்லின் ஆற்றலைப் பாடி விளையாடு!
தசரத மைந்தனின் இயல்பைப் போற்றி விளையாடு!



ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம் 💗💗
        

1 comment:

  1. படங்களை கண்டு ரசித்தேன். நன்றி.

    ReplyDelete