06 April 2022

பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் மரவூரி இராமர் திருக்கோலம்...

 இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...

பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள்,

இரவு - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

பங்குனி பிரமோத்ஸவம் மூன்றாம் திருநாள்  இரவு  - இராஜ அலங்காரத்திலும் ,

 பங்குனி பிரமோத்ஸவம் நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்திலும்  ...


பங்குனி பிரமோத்ஸவம் ஐந்தாம் திருநாள்  இரவு -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் 

மரவூரி இராமர் திருக்கோலம்....




















பங்குனி பிரமோற்சவம் ஆறாம் திருநாள் -  கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....

வாகனத்தின் சிறப்பு -

    அனைத்து திவ்ய தேசங்களிலும் இந்த பறவை பெருமாள்களுக்கு திருவாபரணங்களாகவே  காணப்படுகிறது. கோபாலனுக்கு மட்டுமே வாகனமாக அமைந்திருப்பது பெருமைக்குறியது.  

















 (முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)

பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து

ஒன்பதாம் திருமொழி - என் நாதன்


உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு *

விருப்புற்று அங்கே விரைந்து எதிர் வந்து *

செருக்கு உற்றான் வீரம் சிதைய * தலையைச் 

சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற!

 தேவகி சிங்கத்தைப் பாடிப் பற!


3 309



சிறந்த பெண்மணி ருக்மிணியை ஆசையுடன் 
தேரில் ஏற்றி கண்ணன் செல்கையில், 
அச்சமயம் வேகமாக எதிர்த்து வந்த   உருப்பன் என்றவனின் ஆணவத்தை
அடக்க அவன் சிகையை வெட்டி பங்கப்படுத்தினான்.
அந்த கண்ணனின் ஆற்றலைப் பாடி விளையாடு!
தேவகியின் சிங்கக் குட்டியைப் போற்றி விளையாடு!


ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம் 💗💗

1 comment:

  1. படங்களும் தகவல்களும் சிறப்பு. தொடர்கிறேன்.

    ReplyDelete