29 April 2022

ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேதராய் கல்யாண திருக்கோலத்தில் க்ருஷ்ண தீர்த்த தெப்போத்ஸவம்...

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி முதல் திருநாள் மாலை  ஹரித்ராநதி வடகரை சேதுபாவா சத்திரத்தில் ஆண்டாள் திருக்கோலம்...

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி மூன்றாம் திருநாள் புறப்பாடு...

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி ஆறாம் திருநாள் புறப்பாடு ...

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி ஒன்பதாம் திருநாள் புறப்பாடு....

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி பன்னிரென்டாம் திருநாள்--- ஸ்ரீ ருக்மணி  சத்யபாமா சமேதராய் ஸ்ரீ வித்யா ராஜகோபாலசுவாமி  கல்யாண அவசர திருக்கோலத்தில் க்ருஷ்ண தீர்த்த தெப்போத்ஸவம்...





























 (முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)


பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து 

பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்

இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, 
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் 
கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்


வார் ஆரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு *

சீர் ஆரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம் *

பார் ஆரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார் *

ஏர் ஆரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே. (2)

10 327


மார்பகங்களில் கச்சை உடுத்திய பெண்மணி சீதா தேவியைப் பார்த்து
 சிறந்த வல்லமை படைத்த அனுமன் , 
 தான் ராமபிரானிடமிருந்து அறிந்த அடையாளங்களைக் 
கூறுவதான இவ்விஷயங்களை,
உலககெங்கும் பரவி நிற்கும் புகழுடைய 
ஸ்ரீவில்லிபுத்தூரின் தலைவர் பெரியாழ்வார்,
பாசுரங்களாக அருளிச் செய்த இவற்றைப் பாட வல்லவர்கள், 
அழகு பொருந்திய வைகுந்தத்தில்
நித்தியசூரிகளுடன் கூடியிருப்பர்கள்.



ஸ்ரீ வித்யா ராஜகோபாலசுவாமி திவ்ய தரிசனத்தை முகநூலில்  கண்டு ரசித்து மகிழ்ந்த போது,  இங்கும் பகிர ஆசை வந்தது.

 சரி பகிரலாம் என எண்ணி, பதிவு செய்யும் போது  எப்படங்களை பகிர்வது , எதை விடுவது என தெரியவில்லை ... தினம் தினம் அத்தகைய திவ்யக்   காட்சிகளை  காணும் போது  ஆஹா அழகு அழகு என எண்ணி, அனைத்து படங்களையும் பகிர்ந்து விட்டேன். 

தொடர்ந்து இங்கு வந்து கண்டு ரசித்த அனைவருக்கும் நன்றிகள் பல. விரைவில் நேரில் சென்று ராஜகோபாலசுவாமி காணும் பாக்கியத்தை  அவர் தர வேண்டும். 


ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!

அன்புடன்
அனுபிரேம் 💗💗

1 comment: