13 April 2022

ஒன்பதாம் திருநாள் - சிம்ம வாகனம் இராஜ அலங்காரத்தில்

  இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...

பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள், 

 இரண்டாம் நாள் - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

 மூன்றாம் திருநாள்  இரவு  - இராஜ அலங்காரத்திலும் ,

 நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்திலும்  ...

 ஐந்தாம் திருநாள்  -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் 

மரவூரி இராமர் திருக்கோலம்....

 ஆறாம் திருநாள் -  கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....

 ஏழாம் திருநாள்  ---இரவு புஷ்ப பல்லக்கில்  இராஜ அலங்காரம்

 எட்டாம் திருநாள்   --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில் 

ஒன்பதாம் திருநாள் - சிம்ம வாகனம் இராஜ அலங்காரத்தில் 

































(முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)

பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து

ஒன்பதாம் திருமொழி - என் நாதன்


முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்

அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த

படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று

அடி நிலை ஈந்தானைப் பாடிப் பற!

      அயோத்தியர் கோமானைப் பாடிப் பற!


6     312



அரச பட்டம் சூட்டிக் கொண்டு, மூவுலகமும் ஆண்டு
உன் அடியவனான எனக்கு அருள் புரிய வேண்டுமென
வேண்டி ராமனைத் தொடர்ந்து சென்ற குணத்தின்
பொக்கிஷம்-பரதனுக்கு அன்று தன்னுடைய திருப்
பாதுகைகளை கொடுத்தவனைப் பாடி விளையாடு!
அயோத்தியர்களின் மன்னனைப் போற்றி விளையாடு!


ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம் 💗💗


2 comments:

  1. நம் இறைவனின் திருமேனியின் அழகுக்கு நிகர் எதுவுமில்லை.

    ReplyDelete
  2. சுப கிருது வருகவே..
    சுகங்கள் எல்லாம் தருகவே..
    அறங்கள் எங்கும் பெருகவே..
    அமுதத் தமிழ் நிறைகவே!..

    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete