15 April 2022

பதினொன்றாம் திருநாள் --- இரவு வெள்ளி சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலத்தில்

 

இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...





பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள், 

 இரண்டாம் நாள் - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

 மூன்றாம் திருநாள்  இரவு  - இராஜ அலங்காரத்திலும் ,

 நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்திலும்  ...

 ஐந்தாம் திருநாள்  -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் மரவூரி இராமர் திருக்கோலம்....

 ஆறாம் திருநாள் -  கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....

 ஏழாம் திருநாள்  ---இரவு புஷ்ப பல்லக்கில்  இராஜ அலங்காரம்

 எட்டாம் திருநாள்   --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில் 

ஒன்பதாம் திருநாள் - சிம்ம வாகனம் இராஜ அலங்காரத்தில் 

பத்தாம் திருநாள் - கிளி கண்ணன் திருக்கோலம் மற்றும்  வேணுகோபாலன் திருக்கோலம் 

பதினொன்றாம் திருநாள்  --- இரவு வெள்ளி சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலத்தில்  ..





















 (முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)

பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து

ஒன்பதாம் திருமொழி - என் நாதன்

     

        தார்க்கு இளம் தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம்
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கு இடைச் 
சூர்ப்பணகாவைச் செவியோடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற!
அயோத்திக்கு  அரசனைப் பாடிப் பற!

8     314



கைகேயியினுடைய தந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டு
தன்னுடைய, இளம் பருவத்திலிருந்த , தம்பி பரதனுக்கு
ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு கடும் காட்டிற்க்கு போன
ராமன், அவ்விடத்தில் சீதா பிராட்டியைக் கொல்லும்
நோக்கத்துடனிருந்த அரக்கி சூர்ப்பணகாவின்
காதையும், மூக்கையும், அவள் அலரும்படி
அருத்தானைப் பாடி விளையாடு!
அயோத்தி மன்னனைப் போற்றி விளையாடு!




ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம் 💗💗

1 comment: