அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வ வளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழு நிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதா பிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....
அன்புடன்
அனுபிரேம்
கண்ணாடி அறை சேவை - இந்த வருடத்தினுடையதா? சமீபத்தில் பார்த்தபோது அந்த அறையில் மாற்றங்கள்....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி வெங்கட் சார்...
Deleteஇப்படங்கள் சில வருடங்களுக்கு முந்தியவையே...
சில வருடங்களாக ஆண்டால் சன்னதியில் படங்கள் எடுக்க அனுமதிப்பது இல்லையே...
மார்கழி வாழ்க..
ReplyDeleteமனை மங்கலம் வாழ்க..
படங்கள் அருமை. சில படங்களை நான் சுட்டுப்பேன்
ReplyDeleteசிறப்பு.
ReplyDeleteபடங்களும் பாட்டின் விளக்கமும் அருமை
ReplyDeleteஅழகான படங்கள்.. அருமை.
ReplyDeleteபடங்கள் அருமை
ReplyDeleteநன்றி சகோதரியாரே