07 January 2020

திருப்பாவை – பாசுரம் 22

 அங்கண்மா ஞாலத்து

"கண்ணா! உன் செந்தாமரைக் கண்ணினால் எங்களை நோக்குவாயோ?"












அங்கண்மாஞாலத்தரசர் * அபிமான 

பங்கமாய்வந்து நின்பள்ளிக்கட்டிற்கீழே *

சங்கமிருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம் *

கிங்கிணிவாய்ச்செய்த தாமரைப்பூப்போலே *

செங்கண்சிறுச்சிறிதே எம்மேல்விழியாவோ? * 

திங்களும்ஆதித்தியனும் எழுந்தாற்போல் *

அங்கணிரண்டும்கொண்டு எங்கள்மேல்நோக்குதியேல் *

எங்கள்மேல்சாபம் இழிந்தேலோரெம்பாவாய்.





பொருள்: 

கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும்,

இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும்,

சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள்.

அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம்.

எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும்,

தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும்,

உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா?

சந்திரனும், சூரியனும் உதித்தது போல,

அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால்,

 எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!








ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. படங்கள் எல்லாம் அழகு. முன் அழகு, பின் அழகு படங்கள் அருமை.
    பாடலுக்கு விளக்கம் அருமை.

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி மா

      Delete
  2. பாசுரமும் விளக்கமும் சிறப்பு.

    படங்கள் முன்பே பகிர்ந்தவை போல இருந்தாலும் மீண்டும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி வெங்கட் சார்..

      பின்னழகு படம் மட்டும் ஒரு சிறிய குழப்பத்தில் மீண்டும் ஒரு முறை வந்துவிட்டது ..

      Delete