10 January 2020

திருப்பாவை – பாசுரம் 25

ஒருத்தி மகனாய் 

"கிருஷ்ணா, நாங்கள் விரும்பியதைத் தந்தருளினால் வருத்தம் தீர்ந்து மகிழ்வோம்"







ஒருத்திமகனாய்ப்பிறந்து * ஓரிரவில் 

ஒருத்திமகனாய் ஒளித்துவளர *

தரிக்கிலானாகித் தான்தீங்குநினைந்த *

கருத்தைப்பிழைப்பித்துக் கஞ்சன்வயிற்றில் *

நெருப்பென்னநின்ற நெடுமாலே! * உன்னை 

அருத்தித்துவந்தோம் பறைதருதியாகில் *

திருத்தக்கசெல்வமும் சேவகமும்யாம்பாடி *

வருத்தமும்தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய்.


பொருள்: 

தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! 

அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! 

அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். 

அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! 

உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். 

அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். 

உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.








ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. அருள்வரிகளும், படங்களும் அழகு.

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


    ReplyDelete
  2. சிறப்பான விளக்கம். இன்றைய படங்கள் அனைத்துமே அழகு.

    ReplyDelete