27 February 2023

மனம் கவரும் சிற்பங்கள்...

வாழ்க வளமுடன் 








முந்தைய பதிவில்  போக நந்தீசுவரர் கோவிலின்  கோபுர அழகையும், சிறப்பையும்  கண்டோம். இன்று இன்னும் சில காட்சிகள் ...





வழவழப்பான தூண்கள் ...









அம்பாள் சன்னதியின் வெளிப்புறம் புடைப்பு சிற்பங்களாக விஷ்னு, சிவன், பிரம்மா, ஹனுமான், மற்றும் முனிவர்கள்....




முருக பெருமான் 

கருட வாகனத்தில் பெருமான் 







வெளியே அமைந்து இருந்த தேர் சக்கரங்கள்..



 


முதல் திருமுறை

010 திருவண்ணாமலை

 பாடல் எண் : 3

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்

சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்

ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்

காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.


தோகைகளோடு கூடிய ஆண் மயில்கள் பெண் மயில்களோடு உறையும் பொழில் சூழ்ந்ததும், மூங்கில்கள் சூல் கொண்டு உதிர்க்கும் முத்துக்கள் நிறைந்து சொரிவதும், விரிந்த மலைப் பகுதிகளில் நீர்த் துளிகளோடு கூடிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடையதுமாகிய அண்ணாமலை, இறைவனின், காலனது வலிமையைத் தகர்த்த சிவந்த திருவடிகளைத் தொழுவார் மேலன புகழ்.(தொழுவார் புகழ் பெறுவர் என்பதாம்).


இது  ஒரு நாள் பயணம் தான், ஆனால்  பல பதிவுகளாக கொடுக்கும் அளவு இருந்த சிறப்பான பயணம். அங்கு நாங்கள் பார்த்த, ரசித்த விடங்களும் மற்றும் பல தகவல்களையும் இங்கு   தொடர்ந்து வாசித்த  அனைவருக்கும் நன்றிகள் பல.


அன்புடன் 

அனுபிரேம் 💕💕

1 comment: