1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
2.ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும், சேஷ வாகனத்திலும்
3.ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர ப்ரம்மோத்ஸவம் - ஐந்து கருட சேவை
4.ஆறாம் நாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும் ரெங்கமன்னார் யானை வாகனத்திலும்
5.ஆடிப்பூரம் ஏழாம் திருநாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்ரெங்கமன்னார்.
6. எட்டாம் நாள் இரவு -- ஶ்ரீ ஆண்டாள் - புஷ்பப் பல்லக்கு, ஶ்ரீ ரெங்கமன்னார் - குதிரை வாகனத்தில் புறப்பாடு (போன வருட படங்கள்)
![]() |
ஆறாம் பாசுரம் -- சிற்றில் அழிப்பது என்று நீ வேறொன்றை நினைக்கிறாய். அது எங்களுக்குப் புரியவில்லை என்கிறார்கள்.
519
முற்று இலாத பிள்ளைகளோம் முலை
போந்திலாதோமை நாள் தொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிது
உண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம் கடலை அடைத்து
அரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய
சேவகா! எம்மை வாதியேல் 6
கடலில் அணைகட்டி ராக்ஷஸருடைய குலங்களை முழுவதும் அழித்து இலங்கையை யுத்தபூமியாக்கிய வீரனே! சிறு பிள்ளைகளாய், முலைகளும் கிளரப்பெறாத எங்களை தினமும் சிற்றில் அழிப்பதை ஒரு காரணமாகக் கொண்டு நீ செய்யும் செயல்களுக்கு உட்கருத்து ஒன்று உண்டு. அந்தக் கருத்தை நாங்கள் கற்று அறியவில்லை. எங்களை நீ துன்புறுத்தாதே.
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment