22 December 2019

திருப்பாவை – பாசுரம் 6

புள்ளும் சிலம்பின காண்

பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்










புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் *

வெள்ளைவிளிசங்கின் பேரரவம்கேட்டிலையோ? *

பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலைநஞ்சுண்டு *

கள்ளச்சகடம் கலக்கழியக்காலோச்சி *

வெள்ளத்தரவில் துயிலமர்ந்தவித்தினை * 

உள்ளத்துக்கொண்டு முனிவர்களும்யோகிகளும் *

மெள்ளவெழுந்து அரியென்றபேரரவம் *

உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.






           பொருள்: 

அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு!

பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா?

கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா?

பேய் வடிவம் எடுத்து தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும்,

 சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ண பிரானை யோகிகளும், முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை!

உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.





ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. திருப்பாவை பாடல் விளக்கவுரை அருமை.
    படங்கள் அழகு.
    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  2. திருப்பாவை பாசுரம் விளக்கம் அருமை.

    ReplyDelete