11 August 2022

ஶ்ரீ ஆண்டாள் முத்துக்குறி வைபவம் ...

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ காட்சிகள்....




முந்தைய பதிவுகள் ----

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவம் - மண் எடுக்கும் வைபவம்,  த்வஜாரோஹண காட்சிகள்...  

முதல் நாள் இரவு -- பதினாறு வண்டிச் சப்பரத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ  ரெங்கமன்னார்,

 இரண்டாம்  நாள் இரவு  -ஸ்ரீ  ஆண்டாள் சந்திரபிரபை வாகனத்திலும் ஸ்ரீ ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும்  திருவீதி புறப்பாடு,

மூன்றாம்  நாள்  - இரவு ஸ்ரீ ஆண்டாள் தங்கப் பரங்கி நாற்காலி, ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த  வாகனத்தில் புறப்பாடு,

நான்காம்  திருநாள் - இரவு ஶ்ரீ ஆண்டாள் சேஷ  வாகனத்திலும்  ஶ்ரீ ரங்கமன்னார் கோவர்த்தன கிரி வாகனத்திலும், 

 ஐந்தாம் திருநாள் - ஐந்து கருட சேவை, 

 ஆறாம்  திருநாள் இரவு - ஶ்ரீ ஆண்டாள் கனக தண்டியல், ஶ்ரீ ரங்கமன்னார் கஜ (யானை) வாகனத்தில்...

ஏழாம்  திருநாள் மாலை - ஶ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் சயன திருக்கோலம்,

எட்டாம் திருநாள் இரவு- ஶ்ரீ ஆண்டாள்  புஷ்பப் பல்லக்கு,  ஶ்ரீ ரெங்கமன்னார் - குதிரை வாகனத்தில் புறப்பாடு, 

ஒன்பதாம் திருநாள் -  திரு ஆடிப்பூரத்தை முன்னிட்டு திவ்ய தம்பதிகள் திருத்தேரில்,

பத்தாம் திருநாள் -  ஶ்ரீ ஆண்டாள் முத்துக்குறி   வைபவம்...

















ஆண்டாள் செட்டியக்குடித் தெருப்பெண் அலங்காரத்தில் எழுந்தருளி இருக்கிறார்.

அரங்கன் வந்து தன்னைக் கைத்தலம் பற்றும் நாளும் விரைவில் வராதோ என்று ஆண்டாள்-தலைவி ஏங்கி,ஏங்கி உருகி மெலிந்து விடுவாராம்.

தலைவியின் தாய் தன் மகள் பெருமாள் மேல் காதல் கொண்டு, இப்படி உருகி உருகி மெலிகிறாளே என்று 'இரக்கம் இல்லாத பெருமாளே' என்று கோபித்துக் கொள்வார்.


வாள்-நுதல் இம் மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள்;விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்! உம்மைக்
காண, நீர் இரக்கம் இலீரே

(திருவாய்மொழி 2-4-2)

தலைவியின் நிலை, தாயின் புலம்பல்,  தோழி இயம்புதல் ஆகியவற்றை பல பாசுரங்கள் வாயிலாக அரையர் ஸ்வாமி எடுத்துரைப்பார்.

108 திவ்ய தேசப் பெருமாள்கள், ஆண்டாள் நாச்சியாரை மணம் புரிய வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து விடுகிறார்களாம்.

அவர்களில் யார் ஆண்டாள் கனாவில் கண்ட பெருமாள் என்று கட்டுவிச்சி என்னும் குறத்தி குறி சொல்வாள். அரையர் ஸ்வாமியே குறத்தியாகவும் இருந்து சொல்வார்.

இதற்காக ஆண்டாள் சந்நிதியில் பாரம்பரியமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் நன்முத்துக்களை ஒரு தாம்பாளத்தில் பரப்பி, அவற்றை கைகளால் அலைந்து
ஒவ்வொருவராக விலக்கி நிறைவாக அரங்கர்/ரங்கமன்னார் தான் ஆண்டாள் கவர்ந்த பெருமாள் என்று ஆண்டாளும்,ரங்கமன்னாரும் கூடுவதாக கட்டுவிச்சி (அரையர்) உரைப்பார்.

இந்த வைபவத்தில் அரையரே கேள்வி-பதில் சொல்வார்....

தகுந்த பாசுரங்களை இசைப்பார்....சில இடங்களில் அபிநயமும் செய்வார்....















பட்டு உடுக்கும்; அயர்ந்து இரங்கும்; பாவை பேணாள் 
பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் * 
எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள், 
எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் *
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் 
மட மானை இது செய்தார் தம்மை * மெய்யே 
கட்டுவிச்சி! சொல் என்னச் சொன்னாள், நங்காய்! 
கடல் வண்ணர் இது செய்தார்,காப்பார் ஆரே? 

11 2062

(திருநெடுந்தாண்டகம்)




என் மகளை இந்நிலைமைக்கு ஆளாக்கியவர் யார்? தாயின் கேள்விக்கு கட்டுவிச்சி தன் பதிலைப் பதிவு செய்கிறாள்..
அழகனின்.. அந்த அரங்கனின்.. காரியமே இது..

என்ன இது?

அவனே இதற்குக் காரணம் என்றால் என் மகளைக் காப்பவர் யார்?
அப்படி என்னதான் செய்துவிட்டான் அழகன்?
பட்டாடையை உடுத்திக் கொள்கிறாள்..
அவன் வரவுக்காய் காத்திருக்கிறாள்..
அவன் வரவில்லை..

ஏமாற்றத்தின் உச்சத்தில் ஏங்கித் தவிக்க விட்டான்..
விரும்பி விளையாடும் மரப்பாச்சி கூட தொடாத பொருளாகி விட்டது..
விழிகளில் நீர் ததும்ப உறக்கத்தை துறக்கின்றாள்..

என் அரங்கன் பள்ளி கொண்ட திருவரங்கம் எங்கே எனக்
கேட்டபடியே இருக்கிறாள்..
என் மகளை இந்நிலைமைக்கு ஆளாக்கியவன் அவனேதான்..












ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா காட்சிகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...


நாச்சியார் திருமொழி
பதிமூன்றாம் திருமொழி  : கண்ணன் என்னும் 
காதல் நோய் தணிமின் எனல் 


நான்காம் பாசுரம் -  ச்ரிய:பதியான எம்பெருமானின் திருவாயமுதத்தை என்னைப் பருகச்செய்து என் இளைப்பை நீக்குங்கள் என்கிறாள்.


ஆரே உலகத்து ஆற்றுவார்?

 ஆயர் பாடி கவர்ந்து உண்ணும்

காரேர் உழக்க உழக்கு உண்டு 

தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை

ஆராவமுதம் அனையான் தன் 

அமுத வாயில் ஊறிய

நீர் தான் கொணர்ந்து புலராமே

 பருக்கி இளைப்பை நீக்கிரே 4

630


திருவாய்ப்பாடி முழுவதையும் கொள்ளைகொண்டு அனுபவிக்கிற ஒரு கறுத்த காளை போன்ற கண்ணன் துன்புறுத்த அதனால் துன்பப்பட்டு மிகவும் தளர்ந்து நொந்துகிடக்கிற என்னை இவ்வுலகத்திலே ஆறுதல் சொல்லித் தேற்றுபவர் ஆருள்ளார்? (தாய்மார்கள் “நாங்கள் உள்ளோமே! உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்க) எவ்வளவு அனுபவித்தாலும் த்ருப்தி பிறவாத அம்ருதம் போலிருக்கும் அவனுடைய திருவாயில் ஊறி இருக்கும் ரஸத்தையாவது கொண்டுவந்து எனது உடல் உலர்ந்துபோகாதபடி அதை நான் பருகும்படி செய்து, எனது இளைப்பை நீக்கப் பாருங்கள்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......


தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்

No comments:

Post a Comment