12 April 2022

எட்டாம் திருநாள் இரவு --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில்

 இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...

பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள்,

இரவு - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

பங்குனி பிரமோத்ஸவம் மூன்றாம் திருநாள்  இரவு  - இராஜ அலங்காரத்திலும் ,

 பங்குனி பிரமோத்ஸவம் நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்திலும்  ...

 பங்குனி பிரமோத்ஸவம் ஐந்தாம் திருநாள்  இரவு -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் 

மரவூரி இராமர் திருக்கோலம்....

பங்குனி பிரமோற்சவம் ஆறாம் திருநாள் -  கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....

பங்குனி பிரமோத்ஸவம் ஏழாம் திருநாள்  ---இரவு புஷ்ப பல்லக்கில்  இராஜ அலங்காரம்


பங்குனி பிரமோத்ஸவம் எட்டாம் திருநாள் இரவு  --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில் 











































 (முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)

பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து

ஒன்பதாம் திருமொழி - என் நாதன்



பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து

நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு

அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த

அஞ்சன வண்ணனைப் பாடிப் பற!

      அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற!


5     311


ஐந்து பேர் கொண்ட பாண்டவர்களுக்கு தூதனாகச் சென்று; 
மஹா பாரதப் போரை களமிறங்கி நடத்தி,
விஷத்தைக் கக்கி வசித்து வந்த காளியன் என்ற
கொடிய பாம்பின் குட்டையில் புகுந்து அவன் தலையின்
மேலேறி அவன் பயப்படும்படி நடனமாடி பிறகு
அவனுக்கும் அருள்செய்த;  
அந்த மை நிறமுடையவனைப் பாடி விளையாடு! 
யசோதையின் சிங்கத்தைப் போற்றி விளையாடு!



ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம் 💗💗

1 comment: