18 July 2023

2. ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் தங்க பரங்கி நாற்காலியில்...

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திரு ஆடிப்பூர உற்சவம் 


1.முதலாம் திருநாள் , இரண்டாம் திருநாள் காட்சிகள் 

 மூன்றாம் திருநாள்  இரவு 

ஸ்ரீ ஆண்டாள் தங்க பரங்கி நாற்காலி மற்றும் 

ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த  வாகனத்தில் புறப்பாடு





















 நான்காம் திருநாள் 
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  சேஷ வாகனத்தில் 
 ஸ்ரீரங்க மன்னார் கோவர்தன கிரி வாகனத்தில் 
















நாச்சியார் திருமொழி

11.தாம் உகக்கும் 

திருவரங்கன் மேல் கொண்ட காதல் 

ஐந்தாம் பாசுரம்.   என் வளையை மட்டுமல்ல என் உடம்பையும் கொள்ளைகொள்வானைப்போலே இருந்தான் என்கிறாள்.


பொல்லாக் குறள் உருவாய்ப் பொற் கையில் நீர் ஏற்று

எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான்

நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான்

இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே  5

611


சிறந்த வாமனரூபியாய் அழகிய கையாலே நீரை ஏற்று பிக்ஷை பெற்று ஸகல லோகங்களையும் அளந்து தன் வசப்படுத்திக்கொண்ட ஸ்வாமியாய் நன்மையுடைய பெரியோர் வாழ்கிற குளிர்ந்த திருவரங்கத்தில் திருவனந்தாழ்வானைப் படுக்கையாக உடையரான பெரிய பெருமாள் ஒன்றுமில்லாதவளான என்னுடைய கைம்முதலான இந்த சரீரத்தையும் கொள்ளைகொள்வதைப்போலே இருக்கிறான்.



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗

No comments:

Post a Comment