03 September 2022

22. "தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியைப் போலே"

22 ."தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியைப் போலே"





முன்பு ஒரு காலத்தில் சுதபஸ் என்பவர் இருந்தார். அவருக்குப் பிருச்னி என்ற மனைவி. இருவரும் நாராயணனை நோக்கிப் பல பல ஆண்டுக் காலம் கடும் தவம் புரிந்தார்கள். திருமால் மனம் மகிழ்ந்து “இருவரும் என்னைக் குறித்து கடும் தவம் புரிந்தீர்கள். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் ?” என்றார்.

இருவரும் பெருமாளின் அழகைப் பார்த்துப் பிரமித்தார்கள். உன்னைப் போல ஒரு மகன் எங்களுக்குப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டார்கள். என்னைப் போல ஒருவன் கிடையாதே, அதனால் நானே உங்களுக்கு மகனாகப் பிறக்கிறேன் என்று வரம் கொடுத்தார். ஒருமுறை இல்லை மூன்று முறை பிறக்கிறேன் என்றார்.

முதல் முறை, பிருச்சனி - சுதபஸ் என்ற தம்பதிகளுக்கு ’பிருச்னி கர்ப்பன்’ என்ற பெயருடன் மகனாகப் பிறந்தார்.

இரண்டாவது முறை கஸ்யபர் - அதிதி தம்பதிகளுக்கு வாமனனாகப் பிறந்தார்.

மூன்றாவதாக வசுதேவர் - தேவகிக்குக் கண்ணனாகப் பிறந்தார்.

கம்சனுடைய தங்கை தேவகி. தேவகிக்கும் வசுதேவருக்கும் திருமணம் நடந்தது. கம்சன் இவர்களைத் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தான். அப்போது ஆகாசத்திலிருந்து ஒரு குரல் கேட்டது “கம்சா! இந்தத் தேவகியின் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லப் போகிறது!” என்று

கம்சனுக்கு ஆத்திரம், கோபம், பயம் எல்லாம் சேர்ந்து வந்தது.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி கிடையாது. 

உடனே தன் தங்கை என்றும் பாராமல், தேவகியையும், வசுதேவரையும் பிடித்துச் சிறையில் போட்டான். காவலர்களை அங்கே அமர்த்தினான். குழந்தை பிறந்தால் உடனே எனக்குத் தெரியப்படுத்துங்கள் என்று ஆணையிட்டான்.

முதல் குழந்தை பிறந்தது.

 உடனே அதைக் கொன்றான். 

இரண்டாவது, மூன்றாவது என்று மொத்தம் ஆறு குழந்தைகளைக் கொன்றான்.

 ஏழாவதாகப் பலராமன் கருவில் வளரும்போத, திருமால் தன் மாய சக்தியால் அந்த அந்தச் சிசுவை வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணி கோகுலத்திலிருந்தாள். 

அவளின் வயிற்றில் பிறக்க வைத்தான்.

எட்டாவதாகத் தேவகிக்கு நடுநிசியில் கண்ணன் பிறந்தான்.

 பிறக்கும்போது நல்ல மழை.

நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிவீசியது.

 மரங்கள், செடிகள் பூத்துக் குலுங்கியது.

 மயில்கள் நடனமாடியது. 

பறவைகள் இனிமையாகக் கூவியது. 

மெல்லிய காற்று வீசியது. 

எல்லோர் மனதிலும் ஆனந்தம் நிலவியது.

பிறந்த குட்டிக் கண்ணன் மலர்ந்த தாமரை போலக் காட்சி அளித்தான். கையில் சங்கு சக்கரம், கதை முதலான ஆயுதங்கள், மார்பில் ரத்தான பதக்கம், நீல மேனி, கிரீடம், குண்டலங்கள், தேவகியும் வசுதேவரும் கண்ணனின் அழகைப் பார்த்துப் பிரமித்தார்கள்.

அவர்கள் கண்ணனைப் பார்த்து “தெய்வமே! நீயே நாராயணன் ! நீயே உலகத்துக்கு எல்லாம் மூலம்! நாங்கள் என்ன பாக்கியம் செய்தோம்” என்றார்கள்.

கண்ணன் “நீங்கள் முன்பு தவம் புரிந்தீர்கள், உங்களின் மகனாகப் பிறக்க வேண்டும் வரம் கேட்டீர்கள். முதல் முறை பிருச்னி கர்ப்பனாக, இரண்டாவது வாமனனாக, இப்போது கண்ணனாக அவதாரம் செய்திருக்கிறேன் என்று தன் அவதார ரகசியத்தைக் கூறி.... 

 அவர்களுக்கு முன் பிறவிகளை நினைவுபடுத்த. பிறகு கண்ணன் அவர்களுக்கு  தான் தெய்வம் என்பதை மறக்கச் செய்தான். அவர்களும் இந்தக் குழந்தை தெய்வம் என்பதை மறந்து எடுத்துக் கொஞ்ச ஆரம்பித்தார்கள்”

எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் தேவகியின் வயிற்றில் வந்து பிறப்பதற்கு தேவகி எவ்வளவு பெரிய பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்?

"தேவகியைப் போல கடும் தவம் இயற்றி, எல்லாம் வல்ல அவனை என் வயிற்றில் பெற்றேனா?" என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்மணி. அந்தபெண் சொல்வதை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் இராமானுஜர்.




முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே


திருவாய்மொழி -முதற் பத்து

1 - 4.அம்  சிறைய 

தலைமகள் தூதுவிடல் 


விதியினால் பெடை மணக்கும் மென் நடைய அன்னங்காள்!

மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வற்கு

மதியிலேன் வல் வினையே மாளாதோ? என்று, ஒருத்தி

மதி எல்லாம் உள் கலங்கி, மயங்குமால் என்னீரே!   4.3

2933


என் நீர்மை கண்டு இரங்கி, இது தகாது என்னாத

என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ?

நன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று  ஒரு வாய்ச்சொல்

நன் நீல மகன்றில்காள்! நல்குதிரோ? நல்கீரோ? 4.4

2934












23 . திருவழுந்துர்

ஸ்ரீ செங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ ஆமருவியப்ப ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕


No comments:

Post a Comment